செய்திகள் :

Seeman: "எனக்கு நியாயம் கிடைக்கவில்லை; இதுதான் என் கடைசி வீடியோ" - சீமான் விவகாரத்தில் நடிகை

post image

"இனிமேல் போராட்டம் செய்துகொண்டும், புகார் கொடுத்துக்கொண்டும் இருக்கப் போவதில்லை. இதுதான் எனது கடைசி வீடியோ" என்று சீமான் விவகாரம் குறித்து நடிகை வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், "எனக்கு நடந்தவற்றை மீடியா மூலம் வெளியுலகிற்குச் சொல்ல வேண்டும் என நினைத்தேன். உச்ச நீதிமன்ற தீர்ப்பில் செட்டில்மென்ட் என்று சொல்லி இருக்காங்க. இதனைப் பார்த்ததும் பலர் சீமான் எனக்கு ரூ.10 கோடி இரவோடு இரவாக கொடுத்துவிட்டார். ஈழத்தமிழர்கள் காசை விஜயலட்சுமிக்குக் கொடுத்துட்டார் என சிலர் அபாண்டமாகப் பழி போட்டுவிடுவார்கள். அதனைத் தவிர்க்கவே தற்போது இந்த வீடியோ போடுகிறேன். நேற்று உச்ச நீதிமன்றத்தில் சீமான் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

சீமான்

அதில் சென்னையில் பதியப்பட்ட FIR மீது காவல்துறை விசாரணை மேற்கொள்ளக் கூடாது என வழக்கு தொடர்ந்து இருந்தார். காவல்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் எனக்காக வாதிட்டனர். உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு கொடுத்தார். அதன் பெயரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால், உச்ச நீதிமன்றத்தில் என் சார்பாக யாரும் பேசவில்லை. சீமான் கோரிக்கை மட்டுமே கேட்டு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உயர் நீதிமன்றத்தில் எனக்காக வாதிட்டவர்கள் ஏன் நேற்று உச்ச நீதிமன்றத்தில் யாருமே போய் கேட்கவில்லை? இனி எனக்கு எந்த நீதியும் நியாயமும் கிடைக்காது எனத் தெரிந்து கொண்டேன்.

நடிகை

இனி நான் போராடப்போவதில்லை. இதுவரை மக்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. இப்போது கூட நான் இந்த வீடியோ ஏன் பதிவிடுகின்றேன் என்றால், எனக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை என்பதை தெரியப்படுத்த தான். இதுதான் எனது கடைசி வீடியோ" என நடிகை தெரிவித்திருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

TVK : தடதடக்கும் தூத்துக்குடி தவெக; ஓயாத புகார்கள்; வெடிக்கும் நிர்வாகிகள் - பின்னணி என்ன?

தூத்துக்குடி மாவட்டத்துக்கான நிர்வாகிகளை இன்னும் அறிவிக்கவில்லை தவெக தலைமை. அதிகாரப்பூர்வமாக மா.செக்களை அறிவிப்பதற்கு முன்பாக மாவட்டப் பொறுப்பாளர்களை நியமித்திருந்தார்கள். அதன்படி, தூத்துக்குடி மாவட்ட... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: `தமிழ்நாட்டின் 39 இடங்கள் குறையாது என்கிறார்கள்; ஆனால்..!'- கனிமொழி சொல்வதென்ன?

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் தி.மு.க துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மக்கள்தொகையின் அடிப்பட... மேலும் பார்க்க

`பொதுக் கூட்டத்துக்கு வாங்க; தங்க நாணயத்தோடு போங்க'- அதிமுக-வின் கவர்ச்சிகர அழைப்பு; வைரலான நோட்டீஸ்

ஒரு காலத்தில் தலைவர்களின் பேச்சைக் கேட்க கூட்டம் கூடியதுபோய், தற்போது, கூட்டத்துக்கு ஆட்களைச் சேர்க்கவே அரசியல் கட்சிகள் திணறிவருகின்றன. ஆடி ஆஃப்ர் போல் கவர்ச்சிகரமான பரிசுப் பொருள்களை வழங்கியும், பிர... மேலும் பார்க்க

`உக்ரைன் அதிபர் பதவியிலிருந்து விலகுங்கள்' - அமெரிக்க செனட்டர் பேச்சுக்கு ஜெலன்ஸ்கி-யின் பதில் என்ன?

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே நடந்த காரசார விவாதத்தினால் உலகமே பரபரத்தது.மூன்று ஆண்டுகள் கடந்தும் ரஷ்யா - உக்ரைன் போர் இன்னமும் நடந்து வருகிறது. இந... மேலும் பார்க்க

வேலுமணி இல்ல திருமணம்: எடப்பாடி ஆப்சன்ட்... தமிழிசை, எல்.முருகனுடன் அண்ணாமலை பிரசன்ட்!

கோவை அதிமுக நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான எஸ். பி. வேலுமணி மகன் விஜய் விகாஸ் - தீக்‌ஷனா திருமணம் கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்... மேலும் பார்க்க

NEET: "நீட் ரகசியத்தை Daddy, son சொல்லணும்" - திண்டிவனம் மாணவி தற்கொலை விவகாரத்தில் இபிஎஸ் காட்டம்

நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவ... மேலும் பார்க்க