செய்திகள் :

Shardul Thakur: 'பேட்டிங்குக்கு சாதகமான பிட்ச் மூலம் பௌலர்களுக்கு அநீதி'- ஷர்துல் தாக்கூர் காட்டம்

post image

'ஆட்டநாயகன் ஷர்துல் தாக்கூர்!'

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டியில் லக்னோ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. வழக்கமாக அதிரடியில் வெளுத்து வாங்கி 200+ ஸ்கோர்களை அசால்ட்டாக எடுக்கும் சன்ரைசர்ஸ் அணி இந்தப் போட்டியில் 190 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. லக்னோ அணி மிகச்சிறப்பாக பந்துவீசி சன்ரைசர்ஸ் அணியை கட்டுப்படுத்தியிருக்கிறது.

Shardul Thakur
Shardul Thakur

அதிலும் குறிப்பாக ஷர்துல் தாக்கூர் சிறப்பாக வீசி 4 ஓவர்களில் 34 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். ஐ.பி.எல் இல் அவரின் மிகச்சிறந்த பந்துவீச்சு இதுதான். ஷர்துல் தாக்கூர் மெகா ஏலத்தில் 'Unsold' ஆகியிருந்தார். எந்த அணியும் அவர் மீது ஆர்வம் காட்டவில்லை. லக்னோ அணியில் மோஷின் கான் திடீரென காயமடைய அந்த அணி ரீப்ளேஸ்மெண்ட் வீரராக ஷர்துல் தாக்கூரை அணிக்குள் அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஷர்துலுக்குதான் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டிருந்தது.

'ஜாகீர்கானின் அழைப்பு!'

ஆட்டநாயகன் விருதை வாங்கிவிட்டு ஷர்துல் பேசுகையில், 'ஐ.பி.எல் இல் 'Unsold' ஆன பிறகு எந்த அணியாலும் எடுக்கப்படுவேன் என நம்பவில்லை. ஐ.பி.எல் சமயத்தில் என்ன செய்யலாம் என திட்டமிட்டு கவுண்ட்டி கிரிக்கெட்டில் ஆட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். அதன்பிறகுதான் ரஞ்சி டிராபியில் ஆடிக்கொண்டிருந்த போது ஜாகீர் கானிடமிருந்து அழைப்பு வந்தது.

'நாங்கள் உங்களை எங்களுக்கேற்ற ரீப்ளேஸ்மெண்ட் வீரராக பார்க்கிறோம். வேறு திட்டங்களை வைத்துக் கொள்ளாதீர்கள் தயாராக இருங்கள்.' என்றார். அதன்பிறகுதான் ஐ.பி.எல் யை பற்றி யோசித்து ஐ.பி.எல் இல் ஆடும் மனநிலைக்கு வந்தேன். ஏலம் நடந்த அன்றைய நாள் எனக்கு சரியாக அமையவில்லை. ஆனாலும் என்னுடைய திறமையின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது.
Shardul Thakur
Shardul Thakur

அபிஷேக்கும் டிராவிஸ் ஹெட்டும்தான் சன்ரைசர்ஸ் அணிக்காக அதிக ரன்களை அடிக்கிறார்கள். அவர்கள் நிறைய ரிஸ்க் எடுத்து ஆடுகிறார்கள். அதனால் நானும் ரிஸ்க் எடுத்து வீச நினைத்தேன். அதற்கு பலன் கிடைத்தது.

'பௌலர்களுக்கு அநீதி!'

இதுபோன்ற பிட்ச்களில் பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் குறைவான உதவியே கிடைக்கிறது. பேட்டிங், பௌலிங் சமநிலையில் இருக்கும் வகையில் பிட்ச்கள் தயாரிக்கப்பட வேண்டும் என கடந்த ஆட்டத்தின்போது கூட சொல்லியிருந்தேன். இம்பேக்ட் பிளேயர் விதிக்குப் பிறகு 240-250 ரன்களை அணிகள் எளிதில் எட்டுகின்றன. அப்படி இருக்கையில் பிட்ச்களும் இப்படி தயார்செய்யப்படுவது பந்து வீச்சாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகவே நான் பார்க்கிறேன்.' என ஆதங்கப்பட்டார்.

Dhoni: "தோனிக்கெதிராக இவ்வாறு செய்யக் கூடாது; அவர் ஒய்வுபெற்றால்..." - கெயில் கூறுவது என்ன?

ஆர்.சி.பி-க்கெதிரான போட்டியில் 13 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து வெற்றிக்கு 100+ ரன்கள் தேவை என்று சிஎஸ்கே தத்தளித்த நேரத்தில், தோனி இறங்காமல் அஸ்வின் இறக்கப்பட்டது குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய விவ... மேலும் பார்க்க

CSK vs DC: "தயவுசெய்து இவரை மட்டும் ப்ளேயிங் 11இல் எடுக்காதீர்கள்" - சிஎஸ்கே-க்கு ஹர்பஜன் வார்னிங்

ஐ.பி.எல்-இல் இந்தாண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடுகள் பல்வேறு கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருக்கின்றன. மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் மட்டும் வெற்றிபெற்ற சி.எஸ்.கே அணி,... மேலும் பார்க்க

MI vs KKR: "அஸ்வனி குமாரின் அந்த விக்கெட் மிக முக்கியமானது" - வெற்றிக்குப் பின்னர் ஹர்திக் பாண்டியா

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது மும்பை. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, முதல... மேலும் பார்க்க

MI vs KKR: `எங்கள் தோல்விக்கு இதுதான் காரணம்' - விளக்கும் கொல்கத்தா கேப்டன் ரஹானே

கொல்கத்தா அணிக்கும் மும்பை அணிக்கும் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற போட்டியில், மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்த மும்பை அணி, 16.2 ஓவர்களில் ... மேலும் பார்க்க

Ashwani Kumar: பஞ்சாப் தவறவிட்ட மாணிக்கம்; பட்டை தீட்டிய பல்தான்ஸ்; யார் இந்த அஸ்வனி குமார்?

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற போட்டியில், கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த சீசனில் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது மும்பை. இந்தப் போட்டியின் மூலம் ஐபிஎ... மேலும் பார்க்க

Ashwani Kumar: "கடின உழைப்பால் இங்கு நிற்கிறேன்" - MI vs KKR போட்டி ஆட்டநாயகன் அஸ்வனி குமார்

மும்பை vs கொல்கத்தா ஐபிஎல் போட்டி வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 31) நடைபெற்றது. இதில், டாஸ் வெனறு பவுலிங்கைத் தேர்வு செய்த ஹர்திக் பாண்டியா & கோ, கொல்கத்தாவை 16.2 ஓவர்களில் 116 ரன்களுக்குச்... மேலும் பார்க்க