செய்திகள் :

Sikandar: இங்கிலாந்தில் டெஸ்ட்; பாகிஸ்தானில் T20 - 24 மணி நேரத்தில் சிக்கந்தர் ராசா செய்த சாகசம்

post image

ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா இங்கிலாதில் டெஸ்ட் ஆடிவிட்டு, உடனே அங்கிருந்து அவசர அவசரமா புறப்பட்டு துபாய், அபுதாபி வழியாக லாகூர் வந்து பாகிஸ்தான் சூப்பர் லீகின் இறுதிப்போட்டியில் ஆடி லாகூர் அணியை வெல்ல வைத்திருக்கிறார். இந்த சம்பவம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து அணி
இங்கிலாந்து அணி

இங்கிலாந்து Vs ஜிம்பாப்வே

இங்கிலாந்து- ஜிம்பாப்வே இடையே ஒரே ஒரு டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடந்திருந்தது. இது நான்கு நாட்களை மட்டுமே கொண்ட டெஸ்ட் போட்டி. இதில் இங்கிலாந்து அணி ஜிம்பாப்வேவை மூன்றாவது நாளிலேயே வீழ்தேதி போட்டியை வென்றுவிட்டது.

இதனால் நான்காவது நாள் ஆட்டம் நடைபெறவில்லை. கிடைத்த அந்த இடைவெளியில் ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா பாகிஸ்தான் சென்று அங்கு நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் இறுதிப்போட்டியில் ஆடி லாகூர் அணியை வெற்றி பெறச் செய்திருக்கிறார்.

இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டி முடிந்ததும், அங்கிருந்து துபாய், துபாயிலிருந்து அபுதாபி, அபுதாபியிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்கு வந்திருக்கிறார்.

டாஸ் போட 10 நிமிடங்கள் இருக்கும்போதுதான் அவர் லாகூர் விமான நிலையத்தை வந்தடைந்திருக்கிறார்.

ஆனால் எப்படியும் சிக்கந்தர் ராசா வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் அவரின் பெயரையும் லாகூர் அணி டாஸின் போது அணியில் சேர்த்துவிட்டார்கள்.

சிக்கந்தர் ராசா
சிக்கந்தர் ராசா

போட்டி ஆரம்பிக்கும் சமயத்தில் சரியாக வந்து களமிறங்கி அணியை வெற்றி பெறச் செய்திருக்கிறார்.

7 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸர்களை விளாசி 22 ரன்களை எடுத்து லாகூர் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார்.

பாகிஸ்தானுக்கு வந்த பயணம் குறித்து பேசிய ராசா, “ இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் 25 ஓவர்களை வீசியிருந்தேன். பேட்டிங்கிலும் 20 ஓவர்கள் ஆடினேன்.

பர்மிங்ஹாமில் இரவு உணவு எடுத்துக்கொண்டேன். துபாயில் காலை உணவு, அபுதாபியில் மதிய உணவு. பிறகு பாகிஸ்தானில் மீண்டும் இரவு உணவு.

24 மணி நேரத்தில் சிக்கந்தர் ராசா செய்த சாகசம்
24 மணி நேரத்தில் சிக்கந்தர் ராசா செய்த சாகசம்

இதுதான் தொழில்முறை கிரிக்கெட் வீரனின் வாழ்வு. இத்தகைய வாழ்வு எனக்குக் கிடைத்ததில் நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

CSK: "அவரைப் பார்ப்பதற்கே எனக்குத் தயக்கமாக இருந்தது..." - தோனியுடனான முதல் சந்திப்பு குறித்து ஜடேஜா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான ரவீந்திர ஜடேஜா, அதே அணியைச் சேர்ந்த தமிழக வீரரான அஷ்வினின் யூடியூப் சேனலுக்குப் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.அந்தப் பேட்டியில் தோனியுடனான தனது முதல் சந்த... மேலும் பார்க்க

CSK: "சென்னை மக்கள் நன்கு படித்தவர்கள்; ஆனால் குஜராத்தில்..." - ஜடேஜா சொல்வது என்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான ரவீந்திர ஜடேஜா, அதே அணியைச் சேர்ந்த தமிழக வீரரான அஷ்வினின் யூடியூப் சேனலுக்குப் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் சென்னை மக்கள் குறித்து ஜட... மேலும் பார்க்க

RCB: `இன்னும் ஒரு மேட்ச்தான்...கொண்டாட்டத்துக்கு தயாராகுங்க!' - ரசிகர்களுக்கு ரஜத் பட்டிதர் மெசேஜ்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் பெங்களூரு அணிக்கும் இடையேயான முதல் தகுதிச்சுற்றுப் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வென்று முதல் அணியாக இறுதிப்போ... மேலும் பார்க்க

Shreyas Iyer: `இன்னும் எதுவும் முடியல...' - ஸ்ரேயஸ் ஐயர் நம்பிக்கை

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் பெங்களூரு அணிக்கும் இடையேயான முதல் தகுதிச்சுற்றுப் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வென்று முதல் அணியாக இறுதிப்போ... மேலும் பார்க்க

RCB : '8 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டியில் RCB!' - பஞ்சாபை எப்படி வீழ்த்தியது?

'இறுதிப்போட்டியில் ஆர்சிபி!'பெங்களூரு அணியின் நீண்ட கால ஆசை நிறைவேறியிருக்கிறது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு பெங்களூரு அணி ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருக்கிறது. வலுவான பஞ்சாப் அணியை மிக எளித... மேலும் பார்க்க

RCB: `விண்வெளி நாயகா!'- அணியின் ஒற்றை நம்பிக்கை; கோலிக்காக ஜெயிச்சிட்டு வாங்க RCB

'நல்ல நிலையில் ஆர்சிபி!'ஐ.பி.எல் ப்ளே ஆப்ஸூக்குள் நுழைந்து நிற்கிறது ஆர்சிபி. இன்று பஞ்சாபுக்கு எதிராக முதல் தகுதிச்சுற்றுப் போட்டியிலும் ஆடவிருக்கிறது. ஐ.பி.எல் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது பெங்களூ... மேலும் பார்க்க