செய்திகள் :

Sleep: அலாரம் அடிப்பதற்கு முன்பே கண் விழித்துவிடுகிறீர்களா? அதற்கு அறிவியல் காரணம் இதுதான்!

post image

காலையில் அலாரம் அடிப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பே கண் விழித்து அலாரமை ஆஃப் செய்திருப்போம். இந்த அனுபவம், நம் வாழ்வில் பலமுறை நடந்திருக்கும். இது ஏதோ தற்செயலான நிகழ்வு என்றோ, அல்லது நமக்கு ஏதோ சூப்பர் பவர் இருக்கிறது என்றோ நினைத்திருப்போம். ஆனால் இதற்குப் பின்னால் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது.

சர்க்காடியன் ரிதம் (Circadian Rhythm)

நமது மூளையில் உள்ள ஹைபோதாலமஸின் ஒரு பகுதியான 'சூப்ராச்சியாஸ்மாடிக் நியூக்ளியஸ்' (Suprachiasmatic Nucleus - SCN) தான் இவ்வாறு செயல்படத் தூண்டுகிறது. இது எப்போது தூங்க வேண்டும், எப்போது எழ வேண்டும் என்பதையும் தீர்மானிக்கிறது.

alaram
alaram

நீங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருக்கும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டிருந்தால், அதற்கேற்ப உடலின் இயக்கமும் செயல்படுகிறது. இதன் விளைவாக, அலாரம் அடிப்பதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்பே, உங்கள் உடல் விழித்தெழுவதற்கான செயல்முறைகளைத் தொடங்கிவிடும்.

கார்டிசோல் மற்றும் மெலடோனின் என்ற ஹார்மோன்கள் உறக்கத்தையும், விழிப்பையும் தீர்மானிக்கிறது. இந்த இரண்டு முக்கிய ஹார்மோன்கள் காரணமாக அமைகின்றன.

மெலடோனின் (Melatonin)

இது 'தூக்க ஹார்மோன்' என்று அழைக்கப்படுகிறது. இருள் சூழ்ந்ததும், நமது உடலில் மெலடோனின் அளவு அதிகரித்து, நமக்குத் தூக்கத்தை வரவழைக்கிறது. காலை நெருங்கும்போது, இதன் அளவு படிப்படியாகக் குறையுமாம்.

கார்டிசோல் (Cortisol)

இது 'விழிப்பு ஹார்மோன்' என்று அழைக்கப்படுகிறது. நாம் வழக்கமாக எழும் நேரத்திற்குச் சில மணிநேரங்களுக்கு முன்பு, கார்டிசோலின் அளவு அதிகரிக்கத் தொடங்குமாம். அலாரம் அடிப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு நாம் கண் விழிப்பதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.

தூக்கம்
தூக்கம்

மன அழுத்தமும் ஒரு காரணமா?

சில சமயங்களில், மன அழுத்தமும் நாம் முன்கூட்டியே கண் விழிக்க ஒரு காரணமாக இருக்கலாம். உதாரணமாக, நீங்கள் ஒரு முக்கியமான மீட்டிங்கிற்காகவோ அல்லது ஒரு விமானத்தைப் பிடிப்பதற்காகவோ சீக்கிரம் எழ வேண்டும் என்று நினைத்தால், ஒருவிதமான பதட்டம் ஏற்படும்.

இந்த மன அழுத்தம், கார்டிசோல் மற்றும் ACTH போன்ற மன அழுத்த ஹார்மோன்களை வெளியிட்டு, உங்களை அலாரம் அடிப்பதற்கு முன்பே எழுப்பிவிடுமாம். நீங்களும் இதுபோன்ற அனுபவங்களைச் சந்திருந்தால் கமெண்டில் சொல்லுங்கள்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

மது அருந்துவர்களை கொசு அதிகம் கடிக்குமா? ஆய்வில் வெளியான ஆச்சரிய தகவல்கள்!

மற்றவர்களை காட்டிலும் மது அருந்துபவர்கள் கொசுக்களால் ஈர்க்கப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு மேற்கொண்ட ஆய்வின் முடிவில் பீர் நுகர்வோருக்கும் கொசு கடித்தல... மேலும் பார்க்க

Airplane: விமானங்கள் வெள்ளை நிறத்தில் மட்டும் இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா?

பெரும்பாலும் விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருப்பதை பார்த்திருப்போம். எதற்காக பெரும்பாலான விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருக்கின்றன என்பது குறித்தும் இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணங்களை குறித்தும... மேலும் பார்க்க

அழகான குழந்தைகளை பார்க்கும் போது கிள்ளிவைக்க தோன்றுகிறதா?- இதற்கு பின்னால் இருக்கும் காரணம் இதுதான்!

அழகான குழந்தைகளை பார்க்கும்போது அல்லது சிறிய நாய்க்குட்டி பூனைக்குட்டி என கியூட்டாக ஏதேனும் ஒரு விஷயத்தை பார்க்கும்போது அவற்றை கிள்ளவோ, இறுக்கி அணைக்கவோ, விளையாட்டாக கடிக்கவோ தோன்றும். இந்த உணர்வினை க... மேலும் பார்க்க

இசையால் சாக்லேட்டின் சுவையை அதிகரிக்க முடியுமா? - புதிய ஆய்வில் கண்டறியப்பட்ட சுவாரஸ்யத் தகவல்!

இசையால் மனதை அமைதிப்படுத்தவும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் முடியும் என்று பலரும் அறிந்திருப்போம். ஆனால் ஒரு இசை உணவின் சுவையைக் கூட மேம்படுத்தும் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இசை நிபுணர்கள் இசைய... மேலும் பார்க்க

Snake: இறந்த பிறகும் விஷத்தைக் கக்கும் இந்தியப் பாம்புகள்; புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது என்ன?

இந்தியாவில் காணப்படும் சில கொடிய பாம்பு இனங்கள், குறிப்பாக நாகப்பாம்பு (Cobra) மற்றும் கிரைட் (Krait) போன்ற பாம்புகள் இறந்துபோன பின்பும் கூட பல மணி நேரத்திற்கு விஷம் வெளிப்படுத்தக் கூடியவை எனப் புதிய ... மேலும் பார்க்க

‘டைனோசர்’ என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? ஓர் ஆச்சரியப் பின்னணி

‘டைனோசர்’ என்ற வார்த்தையைக் கேட்டவுடன் பெரிய, செதில்கள் நிறைந்த மிருகங்கள், முன்பு ஒரு காலத்தில் உலவிய காட்சிகள் நம் மனதில் தோன்றும். இந்த பெயர் எங்கிருந்து வந்தது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்க... மேலும் பார்க்க