செய்திகள் :

Syria : சிரியா தேவாலயத்தில் தற்கொலைப் படை தாக்குதல்; 'இவர்கள் தான் காரணம்' கைக்காட்டும் சிரிய அரசு

post image

நேற்று சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை நடந்துகொண்டு இருந்திருக்கிறது.

அப்போது அங்கு தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது கிடைத்துள்ள தரவுகளின் படி, இந்தத் தாக்குதலில் கிட்டத்தட்ட 20 பேர் உயிரிழந்துள்ளனர். 52 பேர் காயமடைந்துள்ளனர்.

தற்கொலைப் படை தாக்குதல் நடந்த தேவாலயம் | சிரியா
தற்கொலைப் படை தாக்குதல் நடந்த தேவாலயம் | சிரியா

இந்தத் தற்கொலைப் படை தாக்குதல் குறித்து சிரியா அரசு கூறுவதாவது, "இந்தத் தற்கொலைப் படை தாக்குதலை சிரியாவை சேர்ந்த ஐ.எஸ் என்னும் இஸ்லாம் தீவிரவாத அமைப்பு தான் நடத்தியுள்ளது. இந்த அமைப்பை சேர்ந்த ஒருவர், துவேலாவில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்திற்குள் நுழைந்து தான் கட்டி வந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்திருக்கிறார்" என்று குற்றம் சாட்டுகிறது.

இந்த சம்பவத்தில் குழந்தைகளும் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை நேரில் கண்டவர், "தற்கொலை படையை சேர்ந்தவர் எலியாஸ் தேவாலயத்திற்குள் வந்து வெடிகுண்டு போன்ற ஒரு கருவியை வெடிக்க செய்தார்" என்று கூறியிருக்கிறார்.

சிரியா அந்த நாட்டில் இருக்கும் சிறுபான்மையினரிடம் கொஞ்சம் கொஞ்சமாக இணக்கமாக செயல்பட சிரியா நாட்டு அரசு முயன்று வருகிறது. இந்த நிலையில், இந்த சம்பவம் மீண்டும் அதிருப்தியைக் கிளப்பி உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி: மோகன் பகவத்துக்கு வெள்ளி வேல் பரிசு..! - வேலுமணி சொல்லும் விளக்கம்

ஆர்எஸ்எஸ் இயக்கம் நூற்றாண்டு விழா மற்றும் பேரூர் முன்னாள் ஆதினம் ராமலிங்க அடிகளார் நூற்றாண்டு விழா ஆகியவற்றை ஒட்டி பேரூரில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், அதிமுக முன்னாள்... மேலும் பார்க்க

`RSS 100’ அஜெண்டா; அதிமுக-வுக்கே அறிமுகம்! - மதுரை முருக பக்தர்கள் மாநாட்டின் Detailed Spot Report!

இரண்டு நாட்களுக்கு முன்பாக பிரதமர் மோடி ஒடிசாவின் புபனேஷ்வருக்கு சென்றிருந்தார். அங்கே பா.ஜ.க ஆட்சியமைத்தது ஓராண்டு நிறைவதை கொண்டாடும் விழா அது. நிகழ்வில் மைக் பிடித்த மோடி,மோடி 'சமீபத்தில் G7 மாநாட்ட... மேலும் பார்க்க

'தனித்து நின்று வெற்றி பெறுவது சாத்தியமில்லை' - தோழமை கட்சிகளால் திமுக-வுக்கு நெருக்கடி?!

தமிழகத்தில் கடைசியாக நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க 173 இடங்களில் போட்டியிட்டது. கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 25, ம.தி.மு.க, வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம்க்கு தலா 6 இடங்கள் வழங்கப்பட்டன. ... மேலும் பார்க்க

Russia: ஈரானுக்கு ஏன் உதவ முன்வரவில்லை? - புதின் நேரடி பதில்

ஈரானின் அணு சக்தி தளங்கள் மீது அமெரிக்க ராணுவம் நேரடியாகத் தாக்குதல் நடத்திய பிறகும், ரஷ்யா ஏன் நேரடியாக ஈரானுக்கு ஆதரவாக போரில் இறங்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புத... மேலும் பார்க்க

"அண்ணாவைக் கேவலப்படுத்துவதை ரசிக்கும் அதிமுக; MGR-ம் ஜெயலலிதாவும் இருந்திருந்தால்.." - ஆர்.எஸ்.பாரதி

மதுரையில் இந்து முன்னணி சார்பில் நேற்று `முருக பக்தர்கள் மாநாடு' நடைபெற்றது.இந்து முன்னணி மாநில தலைவர் காடேஷ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், பா.ஜ.க... மேலும் பார்க்க

``விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட ஆசை; இருந்தாலும்..!” - அதிமுக மாஃபா. பாண்டியராஜன்

விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா.க.பாண்டியராஜன் கூறுகையில், ``விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சி அதிமுக ஆட்சி காலத்தில் சிஏபி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்... மேலும் பார்க்க