செய்திகள் :

T Rajendar: நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரஸ் மீட்; 'உயிருள்ளவரை உஷா' ரீரிலீஸ்; டி.ஆர் சொல்வது என்ன?

post image

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் டி.ராஜேந்தர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார். 1983-ல் அவர் இயக்கி நடித்திருந்த 'உயிருள்ளவரை உஷா' திரைப்படம் வெளியாகியிருந்தது.

டி.ராஜேந்தர்
டி.ராஜேந்தர்

அந்தப் படத்தை இப்போது ரீ-ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார். தன்னுடைய அனைத்துப் படங்களையும் ஒவ்வொன்றாக ரீ-ரிலீஸ் செய்ய டி.ஆர். டாக்கீஸ் என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்.

செய்தியாளர்களிடம் டி.ராஜேந்தர் பேசுகையில், "நீண்ட நாட்களுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்திக்கிறேன். என்னுடைய அனைத்துப் படங்களையும் ஒவ்வொன்றாக ரீ-ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறேன்.

அதில் முதலாவதாக 'உயிருள்ளவரை உஷா' படத்தை ரீ-ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறேன். படத்தை செப்டம்பர் மாதத்தில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். அந்தப் படத்தை தஞ்சை சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் மூலமாகத் தயாரித்திருந்தேன்.

என்னுடைய மனைவி உஷா அந்தப் படத்தின் தயாரிப்பாளர். இப்போது டி.ஆர். டாக்கீஸ் என்ற என்னுடைய புதிய நிறுவனத்தின் மூலமாக என்னுடைய அனைத்துப் படங்களையும் ஒவ்வொன்றாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறேன்.

இப்போது ரீ-ரிலீஸில் பல திரைப்படங்கள் சரித்திர சாதனை படைத்து வருகின்றன. நண்பர் ஏ.எம். ரத்னம் தயாரித்திருந்த 'கில்லி' திரைப்படம் ரீ-ரிலீஸில் சாதனை படைத்திருந்தது. இந்தப் படத்தின் ரீ-மாஸ்டரிங் வேலைகளில் நான் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகிறேன்.

Uyirullavarai Usha Movie
Uyirullavarai Usha Movie

படத்தின் பாடல்கள் அனைத்தையும் புதிதாக நவீனப்படுத்தியிருக்கிறேன். பாடல்களை என்னுடைய டி.ஆர். டிஜி மியூசிக் நிறுவனத்தின் மூலம் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறேன்.

இந்தப் படத்தில் 'ஒண்ணு ரெண்டு மூணு எண்ணிக்கோ, அப்பன் பெயரைச் சொல்லிக்கோ, இந்த வாங்கிக்கோ' என்ற வசனம் பெரிய அளவில் ஹிட்டாகியிருந்தது. இது புதுமையாக அப்போது பேசப்பட்டது. குழந்தைகள் பலரும் இந்த வசனத்தைச் சொல்லத் தொடங்கினார்கள்.

இதன் தொடர்ச்சியாகத் தான் 'தங்கைக்கோர் கீதம்' படத்தில் 'வாடா என் மச்சி' வசனத்தை வைத்திருந்தேன். அதை 'கவண்' திரைப்படத்தில் இயக்குநர் கே.வி. ஆனந்த் வைத்திருந்தார். பிறகு 'மாஸ்டர்' திரைப்படத்தில் விஜய்யும் அதைப் பேசியிருப்பார்" என்று கூறினார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

T Rajendar: 'உயிருள்ளவரை உஷா' படத்தில் ரஜினி நடிக்காமல் போனது ஏன்? - பதில் சொல்கிறார் டி.ராஜேந்தர்es

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் டி.ராஜேந்தர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார். 1983-ல் அவர் இயக்கி நடித்திருந்த 'உயிருள்ளவரை உஷா' திரைப்படம் வெளியாகியிருந்தது. அந்தப் படத்தை இப்போது ரீ-ரிலீ... மேலும் பார்க்க

`பாலிவுட்டுக்கும், தென்னிந்திய சினிமாவுக்கும் இதுதான் வித்தியாஷம்' - ஸ்ருதி ஹாசன் சொல்வது என்ன?

நடிகை ஸ்ருதி ஹாசன் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான 'லக்’ என்ற திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழில் ஏழாம் அறிவு, சிங்கம், 3, பூஜை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து சினிமாவில்... மேலும் பார்க்க

Shruti Haasan: "இது எனது தனிப்பட்ட விருப்பம்" - பிளாஸ்டிக் சர்ஜரி ட்ரோல்கள் குறித்து ஸ்ருதி ஹாசன்

நடிகைகள் சிலர் தங்களது தோற்றத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றிக் கொள்வது வழக்கமான ஒரு விஷயம்தான்.அப்படி பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளும் நடிகைகள் விமர்சனங்களுக்கு ஆளாவதும் உண்டு.ஸ்ருதி ஹாசன்அந்தவகையி... மேலும் பார்க்க

Shruti Hassan: `தக் லைஃப்' படத்தின் தோல்வி கமல்ஹாசனைப் பாதித்ததா? - ஸ்ருதி ஹாசன் அளித்த பதில் என்ன?

நடிகை ஸ்ருதி ஹாசன் 'தி ஹாலிவுட் ரிப்போர்டர்' இந்தியப் பதிப்பக்கத்திற்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் வாழ்க்கை, சினிமா, ட்ரோல், தந்தை கமல்ஹாசன் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பகிர்ந்திருக்க... மேலும் பார்க்க

எதிர்பாராத சூழ்நிலை... திருமணம் ஒத்தி வைக்கப்படுகிறது - பிக் பாஸ் ரித்விகா திடீர் அறிவிப்பு

வரும் 27ம் தேதி தனது திருமணம் நடைபெறும் என அறிவித்திருந்த நடிகை ரித்விகா தற்போது எதிர்பாராத காரணங்களால் அந்தத் திருமணம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.ரித்விகாஇயக்குநர் பாலாவின் பரதேசி மூலம் தமி... மேலும் பார்க்க

Stray Dogs: ``ஒரு பாலியல் குற்றவாளிக்காக எல்லோரையும் அழித்துவிடுவீர்களா?” - நாய்களுக்கு ஆதரவாக கனிகா

டெல்லியில் தெரு நாய்கள் பிரச்னை நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டது. அதிகரித்து வரும் நாய்க்கடி மற்றும் அதன் தாக்குதல் சம்பவங்கள் மக்களை கவலையடையச் செய்துள்ளது. நாய்உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்னையை மிகவும்... மேலும் பார்க்க