இதுவரை 120 நாள்களுக்கு முன்பே, ரயில் டிக்கெட்டை புக் செய்துவிட முடியும். ஆனால், நவம்பர் 1-ம் தேதியில் இருந்து, ரயில் டிக்கெட்டை, பயணம் மேற்கொள்ளும் 60 நாள்களுக்கு முன்புதான் புக் செய்ய முடியும்.
ரயில்வே துறையைப் பொறுத்தவரை, டிக்கெட் புக்கிங் 120 நாள்களுக்கு முன்பே தொடங்கிவிடும். ஆனால், இப்போது வந்திருக்கும் புதிய அறிவிப்பின்படி, 120 நாள்களுக்கு முன்பு புக் செய்யும் நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை மட்டுமே... அதன் பிறகு, டிக்கெட் புக்கிங் 60 நாள்களுக்கு முன்புதான் தொடங்கும்.
'அப்போ... இதுவரைக்கும் போடப்பட்டிருக்கும் டிக்கெட்' என்று பதற்றம் வேண்டாம். அக்டோபர் 31-ம் தேதி வரை புக் செய்யப்படும் டிக்கெட்டில் எந்த மாறுதலும் ஏற்படாது. அந்த டிக்கெட்டுகளை வைத்து தாராளமாகப் பயணம் மேற்கொள்ளலாம்.
ரயில்வேயின் இந்த அறிவிப்பு குறித்த உங்கள் கருத்துகளை, கீழே கமென்ட்டில் பதிவிடுங்கள்!