செய்திகள் :

Trump: ``நெதன்யாகுவுக்கு 'கைது வாரண்ட்' தவறு" - சர்வதேச நீதிமன்றத்தையும் விட்டு வைக்காத ட்ரம்ப்

post image

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது தவறு என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை சாடியுள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை, அமெரிக்க அதிபர் ட்ரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.

இதன் பின்னர், நேற்று, "சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது தவறு. அதன்மூலம், நீதிமன்றம் தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளது. இந்த நீதிமன்றம் அமெரிக்கா மீதும், அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேல் மீதும் சட்டத்திற்கு புறம்பான, அடிப்படையற்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

சர்வதேச நீதிமன்றத்திற்கு ட்ரம்ப் விதித்த தடைகள் என்ன?

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு அமெரிக்காவில் எதாவது சொத்து இருந்தால், அது முடக்கப்படும். அவர்கள் அமெரிக்கா வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது" என்ற உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேல் - இரண்டு நாடுகளுமே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பினர்கள் அல்ல.

பாலஸ்தீனம் மீது போர் தொடுத்ததற்கும், அதற்கு அமெரிக்கா உதவியதற்கு குறிப்பிட்ட அந்த வழக்கு போடப்பட்டது. கடந்த நவம்பர் மாதம், நெதன்யாகுவுக்கு எதிரான கைது வாரண்ட் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கோவை: கூட்டணிக் கட்சிகள் போராட்டம்; புகார்களை அடுக்கிய திமுக எம்பி; மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு

கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் இன்று (பிப்ரவரி 7) நடைபெற்றது. மேயர் ரங்கநாயகி தலைமையில் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் கோவை தி.மு.க எம்.பி., ராஜ்குமார் கலந்து கொண்டார். பொதுவாக, மாமன்றக் கூட்டத்தில் எத... மேலும் பார்க்க

`யார் ஆட்சியில் அமர வேண்டும் என தீர்மானிக்கக் கூடிய மாநாடு’ - வணிகர் சங்க மாநாடு குறித்து விக்ரமராஜா

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக 11 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் 42 ஆம் ஆண்டு மாநில மாநாடு குறித்த கலந்தாய்வு கூட்டம் தேனியில் நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்... மேலும் பார்க்க

மாஞ்சோலை: `கடைசி நம்பிக்கையும் தகர்ந்துவிட்டது' - காத்திருந்த தொழிலாளர்கள்; பார்க்காமல் போன ஸ்டாலின்

நெல்லை மாவட்டத்தில் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், புதிய திட்டங்களைத் தொடங்கிவைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாகச் சென்றிருக்கிறார். முதல் நாளான நேற்று, டாடா சோலார், விக்... மேலும் பார்க்க

'பனாமா கால்வாய்க்கு குறிவைக்கும் ட்ரம்ப்' - சர்வதேச அரசியலில் என்ன நடக்கிறது?

ட்ரம்பின் பனாமா டார்கெட்இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றிருக்கும் ட்ரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக சமீபத்தில், "பனாமா கால்வாய் வழியாகச் பயணிக்கும்... மேலும் பார்க்க

``வரலாற்றை யாராலும் அழிக்க முடியாது... அது நிச்சியம் பழிவாங்கும்" - கண்ணீர்விட்ட ஷேக் ஹசீனா

வங்க தேசத்தில் மூன்றாவது முறை பிரதமராகப் பதவியேற்று ஆட்சியில் இருந்த ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு வங்கதேச மாணவர்களின் போராட்டத்தால் நாட்டைவிட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார். அதன்பிறகு பதவிநீக்கம் செய்... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "கலெக்டர் மறுப்பு தெரிவிக்க வேண்டும்; இல்லையென்றால்..." - ராஜன் செல்லப்பா காட்டம்

"அதிமுக குறித்து உண்மைக்குப் புறம்பாக அறிக்கை வெளியிட்டதற்கு மாவட்ட ஆட்சியர் மறுப்பு வெளியிட வேண்டும் இல்லையென்றால் நீதிமன்றத்தில்வழக்குத்தொடுப்போம்" என்று திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் ... மேலும் பார்க்க