செய்திகள் :

UK: லண்டன் வீதிகளில் திரண்ட மக்கள், போராட்டத்தில் வன்முறை; எலான் மஸ்க் பேசியது என்ன?

post image

தற்போது லண்டன் வீதிகளில் போராட்டம் தொடங்கி இருக்கிறது.

என்ன போராட்டம்?

நேற்று, 'யூனைட் தி கிங்டம்' என்ற பெயரில் தீவிர வலதுசாரி செயற்பாட்டாளர் டாமி ராபின்சன் லண்டனில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார்.

இந்தப் போராட்டத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருக்கின்றனர்.

குடியேற்றம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான குரல்கள் இந்தப் போராட்டத்தில் ஓங்கி ஒலித்தன.

இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த 1,000-க்கும் மேற்பட்ட காவல்படை களமிறக்கப்பட்டது. இருந்தும், ஆங்காங்கே வன்முறைகள் வெடித்திருக்கின்றன. அதில் காவலர்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

எலான் மஸ்க்

ஆன்லைனில் பேசிய எலான் மஸ்க்

இந்தப் போராட்டத்தினரிடம் ஆன்லைனில் பேசிய உலகில் டாப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், பிரிட்டன் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்றும், புதிய அரசாங்கத்தைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

தற்போது பிரிட்டனின் வெளிநாட்டினரின் குடியேற்றம் அதிகரித்துக்கொண்டு வருகிறது. இதை எதிர்த்துதான் இந்தப் போராட்டம் வெடித்துள்ளது.

சமீபத்தில், இதே மாதிரியான போராட்டம் ஆஸ்திரேலியாவிலும் முன்னெடுக்கப்பட்டது.

சமீப காலமாகவே, உலக நாடுகளில், ஆட்சியாளர்களுக்கு எதிரான அதிருப்தி, ஆட்சி மாற்றம் போன்றவை எழுந்து வருகின்றன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

``டாஸ்மாக்கில் ரூ.40,000 கோடி ஊழல், மேலிடம் வரை எல்லோருக்கும் தொடர்பு'' - எடப்பாடி குற்றச்சாட்டு

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கோவை மாவட்டம் சிங்காநல்லூர், சூலூர் தொகுதிகளில் பிரசார பயணம் செய்தார். சிங்காநல்லூர் அருகே பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் இருந்தபோது... மேலும் பார்க்க

பாலஸ்தீனம் தனி நாடாக இந்தியா ஆதரவு - ஐநாவில் நிறைவேறிய தீர்மானம்; அமெரிக்கா அதிருப்தி

பாலஸ்தீன பிரச்னையை அமைதியாக தீர்க்கவும், இரு-நாடு தீர்வை முன்னெடுக்கவும் வலியுறுத்தும் 'நியூயார்க் அறிக்கை' தீர்மானத்தை இந்தியா ஐ.நா பொதுச் சபையில் ஆதரித்தது. பிரான்ஸ் முன்மொழிந்த இந்தத் தீர்மானம் 142... மேலும் பார்க்க

``நூறு, பீரு, சோறு கொடுத்தால் அவர்கள் பின்னால் ஏன் செல்கிறீர்கள்?'' - பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

தமிழகம் முழுவதும், "உள்ளம் தேடி, இல்லம் நாடி" என்ற பிரசாரத்தை தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பிரசாரத்தை மேற்கொண்டார்.... மேலும் பார்க்க

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தாரா நவாஸ் கனி எம்பி? - சிபிஐ விசாரிக்க வழக்கு

ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மீதான சொத்து குவிப்பு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.வழக்கறிஞர் வெங்கடாசலபதி என்பவர் சென்னை உய... மேலும் பார்க்க

``ரஷ்யா, சீனாவுக்கு எப்போது அமெரிக்கா வரி விதிக்கும்?'' - ட்ரம்ப் அதிரடி பதிவு

ரஷ்யா - உக்ரைன் போரை எப்படியாவது முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அதற்கேற்றாற்போல், ரஷ்யாவிற்கு கெடுபிடி கொடுக்க, ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி ... மேலும் பார்க்க

``1,400 ஏக்கர் விவசாயம் பாதிக்கும்'' - புறவழிச்சாலை அமைக்க கோவை, திருப்பூர் விவசாயிகள் எதிர்ப்பு

கோவை சுகுணாபுரம் – நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதிலேயே பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வரும் நிலையில், மறுபக்கம் கோவை – சத்தியமங்கலம் பசுமை வழிச்சாலை... மேலும் பார்க்க