குரங்கினால் தூக்கிச் செல்லப்பட்ட பூனைக்குட்டிக்காக கிராமமே காத்திருக்கும் சுவரஸ்...
Vaccine: இந்தியாவில் 14.4 லட்சம் குழந்தைகள் தடுப்பூசி போடவில்லையா? - அதிர்ச்சி தரும் ஆய்வு!
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் சவாலை எதிர்கொள்ளும் தெற்காசிய நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் திகழ்கிறது. நாடுமுழுவதும் 2023-ம் ஆண்டு 14.4 லட்சம் குழந்தைகள் ஒரு தடுப்பூசி கூட போட்டுக்கொள்ளாமல் இருந்ததாக லான்சென்ட் ஆய்வு நிறுவனம் கூறுகிறது.
1980 முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் வழக்கத்தால் பல மில்லியன் உயிர்கள் காக்கப்பட்டுள்ளன. எனினும் கோவிட் 19 பெருந்தொற்றுக்குப் பிறகு உலகம் முழுவதுமே தடுப்பூசிகள் போட்டுக்கொள்வது சரிந்துள்ளது. இது மிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தெற்காசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளும் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
உலகளாவிய நோய் சுமை தரவு 2023 (the Global Burden of Disease 2023 data)-ன் அடிப்படையிலான இந்த ஆய்வு, 1980 முதல் 2023 வரை தடுப்பூசிகள் எவ்வளவு பரவலாக செலுத்தப்படுகின்றன என்பதை ஆராய்ந்தன.
இந்த ஆய்வு டிப்தீரியா, தட்டம்மை, போலியோ, காசநோய், நிமோனியா மற்றும் ரோட்டா வைரஸ் ஆகிய நோய்களுக்கு எதிரான 11 முக்கிய தடுப்பூசிகளை கருத்தில்கொண்டு மேற்கொள்ளப்பட்டது.
1974-ம் ஆண்டு உலக சுகாதார மையம், நோய்த்தடுப்பு மருந்து குறித்த அத்தியாவசிய திட்டத்தைத் தொடங்கியதில் இருந்து 15.4 கோடி குழந்தைகளின் உயிர்கள் காக்கப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன. ஆனால் சமீப ஆண்டுகளாக குறிப்பாக கோவிட்டுக்குப் பிறகு தடுப்பூசிகள் போட்டுக்கொள்வது குறைந்துள்ளது.

ஜீரோ-டோஸ் குழந்தைகள்
இந்த ஆய்வில் அடிப்படையான முதல் டிடிபி தடுப்பூசி கூட போட்டுக்கொள்ளத குழந்தைகள் ஜீரோ-டோஸ் குழந்தைகள் என அழைக்கப்படுகின்றனர்.
1980 முதல் 2019 வரை பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களின் விளைவாக ஜீரோ-டோஸ் குழந்தைகளின் எண்ணிக்கை உலக அளவில் 75% ஆக குறைக்கப்பட்டிருந்தது. அது முழுவதுமாக மாறி, 2021-ம் ஆண்டு உலக அளவில் 1.86 கோடி குழந்தைகள் ஒரு தடுப்பூசி கூட போடவில்லை என்ற நிலை வந்துள்ளது.
2023-ம் ஆண்டு உலகம் முழுவதும் 15.7 கோடி ஜீரோ டோஸ் குழந்தைகள் இருந்திருக்கின்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 8 நாடுகளிலேயே உள்ளனர்.
அவை, நைஜீரியா, இந்தியா, காங்கோ ஜனநாயக குடியரசு, எத்தியோப்பியா, சோமாலியா, சூடான், இந்தோனேசியா மற்றும் பிரேசில்.
இந்தியாவில் மட்டும் 14.4 லட்சம் குழந்தைகள் ஒரு தடுப்பூசிக்கூட போட்டுக்கொள்ளாமல் உள்ளனர். இதனால் இந்த பட்டியலில் நைஜீரியாவுக்குப் பிறகு இரண்டாம் இடம் பிடிக்கிறது நம் நாடு.
கோவிட் 19 தாக்கம்
கொரோனா வைரஸ் பரவல் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை வெகுவாக பாதித்தது. டிடிபி, தட்டம்மை (MCV1), மற்றும் போலியோ ஆகியவை தடுப்பூசிகள் செலுத்துவதில் வீழ்ச்சியை எதிர்கொண்டனர். இன்றுவரை கோவிட்டுக்கு முந்தைய நிலைக்குத் திரும்ப முடியாத நிலையே தொடர்கிறது. அதிக வருமானம் கொண்ட நாடுகளும் கூட இதில் தப்பவில்லை.
இப்போதிருந்து முழு அர்பணிப்புடன் செயல்பட்டால் மட்டுமே 2023-க்குள் டிடிபி3 (இறுதி டிடிபி தடுப்பூசி) 90% குழந்தைகளுக்கு செலுத்தபடுவதற்கான இலக்கை அடைய முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதற்கு அணுகல் குறைவான ஒதுக்கப்பட்ட இடங்களில் சென்று சேவையாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இல்லையென்றால் பல லட்சம் குழந்தைகளின் உயிர்கள் அபாயாத்தில் தள்ளப்படுமென்றும் எச்சரித்துள்ளனர்.