செய்திகள் :

அஜித்குமார் கொலை வழக்கு: சிபிஐ அலுவலகத்தில் 5 பேர் ஆஜர்!

post image

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் 5 பேர் ஆஜராகியுள்ளனர்.

அதிகாரிகளால் சம்மன் அளிக்கப்பட்ட அஜித்குமாருடன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட உதவி ஆணையரின் ஓட்டுநர் கார்த்திகேயன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார் அஜித்குமாரின் சகோதரர் நவீன் மற்றும் அஜித் குமாருடன் காவலராக பணிபுரிந்த பிரவீன் குமார் வினோத்குமார் ஆகியோர் இன்று மதுரை ஆத்திகுளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்

மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கடந்த 28ஆம் தேதி திருப்புவனம் காவல் நிலைய திருட்டு வழக்கு விசாரணைக்குத் தனிப்படை காவலர்கள் அழைத்துச் சென்றபோது கடுமையாகத் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு சி.பி.ஐ தற்சமயம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. கடந்த 14 ஆம் தேதி முதல் சி.பி.ஐ விசாரனையின்போது டி.எஸ்.பி மோஹித்குமார் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் அஜித்குமார் தாக்கப்பட்டதாக கூறப்படும் அறநிலையத்துறை அலுவலகம் பின்புறமுள்ள கோசாலை, அரசினர் மாணவர் விடுதி, புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு விசாரணையைத் துவங்கினர்.

இரண்டாம் நாளில் மதுரை பகுதிகளில் ஆவனங்களை பெறும் பணியினை மேற்கொண்டதுடன், இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள அறநிலையத்துறை ஊழியர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆகியோர்களுக்கு விசாரனைக்கான சம்மனை வழங்கினர். இதில் அஜித்குமார் நண்பரான ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், உதவி ஆனையர் ஓட்டுநர் கார்த்திக்வேல், அஜித்குமாரின் சக ஊழியர்களான பிரவின்குமார், வினோத்குமார், ஆகியோர் மற்றும் அஜித்குமாரின் சகோதரரான நவீன் குமார் ஆகியோருக்கு மடப்புரம் அறநிலையத்துறை அலுவலகத்திற்கு வந்த சி.பி.ஐ அதிகாரி நேரில் அனைவரையும் வரவழைத்து மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜராகக் கூறி சம்மன் வழங்கியிருந்தனர்.

இந்த நிலையில், மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகளால் சம்மன் அளிக்கப்பட்ட அஜித்குமாருடன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட உதவி ஆணையரின் ஓட்டுநர் கார்த்திகேயன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார் அஜித்குமாரின் சகோதரர் நவீன் மற்றும் அஜித் குமாருடன் காவலராக பணிபுரிந்த பிரவீன் குமார் வினோத்குமார் ஆகியோர் இன்று மதுரை ஆத்திகுளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜர் ஆகினார்கள்.

Five people have appeared at the CBI office in connection with the Ajith Kumar murder case.

கோவை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 7 பேருக்கு வாழ்நாள் சிறை!

கோவையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 7 பேருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையை விதித்து கோவை போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை, சீரநாய... மேலும் பார்க்க

3 நாள்களுக்கு நீலகிரி, கோவைக்கு மிக கனமழை எச்சரிக்கை!

நீலகிரி, கோவை மாவட்டத்துக்கு 3 நாள்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தெற்கு ஆந்திர... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!

சென்னை: வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்து தவறான தகவல் அளித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.வேலூரைச் சேர்... மேலும் பார்க்க

கூட்டணி ஆட்சியா? தவெகவுடன் கூட்டணியா? - இபிஎஸ் பதில்!

தமிழ்நாட்டில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக - பாஜக கூட்டணி உரு... மேலும் பார்க்க

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ - ஜாக் அமைப்பினர் போராட்டம்!

திருவள்ளூர்: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ-ஜாக் அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் 195 பேர் கைது செய்யப்பட்டனர்.பல்வேறு வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இ... மேலும் பார்க்க

வீரவநல்லூர் அருகே மாணவர் தற்கொலை: பள்ளி வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

வீரவநல்லூர் அருகே பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மர்ம நபர்கள் பள்ளி வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகேயுள்ள மானாபரநல்லூர் வடக்குத் தெருவைச... மேலும் பார்க்க