செய்திகள் :

வீரவநல்லூர் அருகே மாணவர் தற்கொலை: பள்ளி வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

post image

வீரவநல்லூர் அருகே பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மர்ம நபர்கள் பள்ளி வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகேயுள்ள மானாபரநல்லூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த சங்கரகுமார் என்பவரின் மகன் சபரிகண்ணன் (வயது 15). இவர் வீரவநல்லூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 7-ஆம் தேதி, ஆசிரியர்கள் கண்டித்ததால் மனமுடைந்த சபரிகண்ணன் விஷம் குடித்து விட்டு பள்ளிக்குச் சென்றுள்ளார். மயங்கிய நிலையில் கிடந்த சபரிகண்ணன், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், நேற்று (ஜூலை 17) சிகிச்சை பலனின்றி பலியானார்.

சபரிகண்ணனின் மரணம் அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நேற்று இரவு, ஆத்திரமடைந்த மாணவரின் உறவினர்கள் வீரவநல்லூர் காவல் நிலையம் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு, உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மாணவர் தற்கொலை சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், மேலும் ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

மாணவர் சபரிகண்ணன் படித்த தனியார் பள்ளிக்குச் சொந்தமான வாகனங்கள், வீரவநல்லூர்-வெள்ளாங்குளி செல்லும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்தன.

நள்ளிரவு சுமார் 12 மணியளவில், இந்த வாகனங்கள் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதையடுத்து, அடுத்தடுத்து நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின.

தகவல் அறிந்ததும், சேரன்மகாதேவி தீயணைப்புப் படையினரும், காவல்துறையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மாணவன் சபரிகண்ணன் தற்கொலை செய்துகொண்டதன் எதிரொலியாக, பள்ளி வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகத் தெரிகிறது. சம்பவ இடத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியா? - தமிழிசை பதில்!

In the case of a school student committing suicide near Veeravanallur, mysterious individuals threw petrol bombs at school vehicles.

கோவை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 7 பேருக்கு வாழ்நாள் சிறை!

கோவையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 7 பேருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையை விதித்து கோவை போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை, சீரநாய... மேலும் பார்க்க

3 நாள்களுக்கு நீலகிரி, கோவைக்கு மிக கனமழை எச்சரிக்கை!

நீலகிரி, கோவை மாவட்டத்துக்கு 3 நாள்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தெற்கு ஆந்திர... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!

சென்னை: வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்து தவறான தகவல் அளித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.வேலூரைச் சேர்... மேலும் பார்க்க

கூட்டணி ஆட்சியா? தவெகவுடன் கூட்டணியா? - இபிஎஸ் பதில்!

தமிழ்நாட்டில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக - பாஜக கூட்டணி உரு... மேலும் பார்க்க

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ - ஜாக் அமைப்பினர் போராட்டம்!

திருவள்ளூர்: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ-ஜாக் அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் 195 பேர் கைது செய்யப்பட்டனர்.பல்வேறு வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இ... மேலும் பார்க்க

அஜித்குமார் கொலை வழக்கு: சிபிஐ அலுவலகத்தில் 5 பேர் ஆஜர்!

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் 5 பேர் ஆஜராகியுள்ளனர். அதிகாரிகளால் சம்மன் அளிக்கப்பட்ட அஜித்குமாருடன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட உதவி ஆணையரின் ஓட்டுநர் கார்த்திகே... மேலும் பார்க்க