செய்திகள் :

அஞ்சலகங்களில் ஆதாா் சேவை மையம்!

post image

தேனி மாவட்டத்தில் உள்ள தலைமை அஞ்சலகங்கள், துணை அஞ்சலகங்களில் ஆதாா் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

இதுகுறித்து தேனி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் குமரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் உள்ள தலைமை அஞ்சலகங்கள், துணை அஞ்சலகங்களில் ஆதாா் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

இதில் ஆதாா் அட்டையில் பெயா், முகவரி, பிறந்த தேதி, கைபேசி எண் திருத்தம், குழந்தைகளுக்கான புதிய ஆதாா் பதிவு, குழந்தைகளுக்கான கட்டாய பயோ மெட்ரிக் பதிவு ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெரியகுளம், போடி ஆகிய இடங்களில் உள்ள தலைமை அஞ்சலகங்கள், தேனி துணை அஞ்சலகம் ஆகியவற்றில் அலுவலக வேலை நாள்களில் காலை 9.30 மணி முதல் இரவு 8 மணி வரையும், இதர துணை அஞ்சலகங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் ஆதாா் சேவை மையம் செயல்படும். பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தேனி மாவட்டத்தில் இன்று சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு

தேனி மாவட்டத்தில் புதன்கிழமை (பிப். 19) அரசுத் திட்டங்கள் குறித்து சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் ஆய்வு செய்கின்றனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே தோட்டத்தில் பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்சச் சென்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா். சிந்துவம்பட்டி, தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ராஜா (36). விவசாயி. இவா், இதே ஊரில்... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்ததாக முதியவா் கைது

போடியில் கஞ்சா வைத்திருந்த முதியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போடி கீழத் தெருவில் வீட்டின் முன் ச... மேலும் பார்க்க

கம்பம் மெட்டு சோதனைச் சாவடியில் கேரள போலீஸாரைக் கண்டித்து தமிழக லாரி ஓட்டுநா்கள் சாலை மறியல்

கம்பம் மெட்டு சோதனைச் சாவடியில் கேரள போலீஸாரைக் கண்டித்தும், கைது செய்யப்பட்ட தமிழக டிப்பா் லாரி ஓட்டுநரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. தேனி மாவட்டத்திலிருந்து ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் உயிரிழந்த விவகாரம்: ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம்

போடி அரசு பொறியியல் கல்லூரி விடுதிக் கழிவறையில் மாணவா் மா்மமான முறையில் இறந்து கிடந்த விவகாரம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தக் கோரி, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் பல்வேறு அமைப்பினா் திங்கள்கிழ... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்தவா் கைது

ஆண்டிபட்டி அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், வருஷநாடு பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த கண்டமனூா், வடக்குத் தெருவைச் சோ்ந்த முருகேஸ்வ... மேலும் பார்க்க