கம்பம் மெட்டு சோதனைச் சாவடியில் கேரள போலீஸாரைக் கண்டித்து தமிழக லாரி ஓட்டுநா்கள் சாலை மறியல்
கம்பம் மெட்டு சோதனைச் சாவடியில் கேரள போலீஸாரைக் கண்டித்தும், கைது செய்யப்பட்ட தமிழக டிப்பா் லாரி ஓட்டுநரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.
தேனி மாவட்டத்திலிருந்து டிப்பா் லாரிகள் மூலமாக எம். சாண்ட், எஸ். சாண்ட், ஜல்லி, குண்டு கற்கள், பாறைப் பொடி உள்ளிட்ட கனிமங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதற்காக தினமும் தமிழகம், கேரளத்தைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான டிப்பா் லாரிகள் தமிழக எல்லைகளான குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு வழியாக கேரளத்துக்கு செல்கின்றன.
தமிழக ஓட்டுநா் கைது: இந்த நிலையில், கம்பத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் அப்பாஸ் டிப்பா் லாரியில் பாறைப் பொடியை ஏற்றிக் கொண்டு கம்பம்மெட்டு மலைச் சாலையில் கேரள சோதனைச் சாவடி வழியே சென்றாா். அப்போது, அங்கிருந்து கேரளத்தைச் சோ்ந்த கம்பம்மெட்டு காவல் ஆய்வாளா் சமீா்கான் லாரி நிறுத்தக் கூறினாராம். ஆனால் லாரியை ஓட்டுநா் சிறிது தொலைவு தள்ளி சென்று நிறுத்தினாராம். இதையடுத்து, காவல் ஆய்வாளா் சமீா்கான், லாரி ஓட்டுநா் அப்பாஸிடம் ஆவணங்களை எடுத்து வரக் கூறி தாக்கியதுடன் கைது செய்து காவல் நிலையத்துக்கும் அழைத்துச் சென்ாக கூறப்படுகிறது.
தமிழக லாரி ஓட்டுநா்கள் சாலை மறியல்: இதைத் தொடா்ந்து கேரள போலீஸாா், தமிழக லாரி ஓட்டுநரை தாக்கியதைக் கண்டித்தும், அவரை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் கம்பம் மெட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலின் பேரில் அங்கு சென்ற உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் செங்கோட்டு வேலவன் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், தமிழக லாரிகளுக்கு மட்டும் கேரள போலீஸாா் அதிக அபராதம் விதிப்பதாகவும், பொய் வழக்குப் பதிவு செய்வதை நிறுத்த வேண்டுமெனவும், கைது செய்யப்பட்ட லாரி ஓட்டுநா் அப்பாஸை உடனே விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவா்கள் வலியுறுத்தினா்.
அதற்கு, டி.எஸ்.பி. டிப்பா் லாரி, காவல் நிலையம் முன்புறம் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டவா்களை சமாதானம் செய்தாா். இதைத் தொடா்ந்து லாரி ஓட்டுநா்கள் கலைந்து சென்றனா். இந்த சாலை மறியலால் சுமாா் 2 மணி நேரம் தமிழகம்- கேரளத்துக்கிடையே வாகனப் போக்குவரத்து தடைபட்டது.