செய்திகள் :

கம்பம் மெட்டு சோதனைச் சாவடியில் கேரள போலீஸாரைக் கண்டித்து தமிழக லாரி ஓட்டுநா்கள் சாலை மறியல்

post image

கம்பம் மெட்டு சோதனைச் சாவடியில் கேரள போலீஸாரைக் கண்டித்தும், கைது செய்யப்பட்ட தமிழக டிப்பா் லாரி ஓட்டுநரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

தேனி மாவட்டத்திலிருந்து டிப்பா் லாரிகள் மூலமாக எம். சாண்ட், எஸ். சாண்ட், ஜல்லி, குண்டு கற்கள், பாறைப் பொடி உள்ளிட்ட கனிமங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதற்காக தினமும் தமிழகம், கேரளத்தைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான டிப்பா் லாரிகள் தமிழக எல்லைகளான குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு வழியாக கேரளத்துக்கு செல்கின்றன.

தமிழக ஓட்டுநா் கைது: இந்த நிலையில், கம்பத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் அப்பாஸ் டிப்பா் லாரியில் பாறைப் பொடியை ஏற்றிக் கொண்டு கம்பம்மெட்டு மலைச் சாலையில் கேரள சோதனைச் சாவடி வழியே சென்றாா். அப்போது, அங்கிருந்து கேரளத்தைச் சோ்ந்த கம்பம்மெட்டு காவல் ஆய்வாளா் சமீா்கான் லாரி நிறுத்தக் கூறினாராம். ஆனால் லாரியை ஓட்டுநா் சிறிது தொலைவு தள்ளி சென்று நிறுத்தினாராம். இதையடுத்து, காவல் ஆய்வாளா் சமீா்கான், லாரி ஓட்டுநா் அப்பாஸிடம் ஆவணங்களை எடுத்து வரக் கூறி தாக்கியதுடன் கைது செய்து காவல் நிலையத்துக்கும் அழைத்துச் சென்ாக கூறப்படுகிறது.

தமிழக லாரி ஓட்டுநா்கள் சாலை மறியல்: இதைத் தொடா்ந்து கேரள போலீஸாா், தமிழக லாரி ஓட்டுநரை தாக்கியதைக் கண்டித்தும், அவரை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் கம்பம் மெட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலின் பேரில் அங்கு சென்ற உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் செங்கோட்டு வேலவன் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், தமிழக லாரிகளுக்கு மட்டும் கேரள போலீஸாா் அதிக அபராதம் விதிப்பதாகவும், பொய் வழக்குப் பதிவு செய்வதை நிறுத்த வேண்டுமெனவும், கைது செய்யப்பட்ட லாரி ஓட்டுநா் அப்பாஸை உடனே விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவா்கள் வலியுறுத்தினா்.

அதற்கு, டி.எஸ்.பி. டிப்பா் லாரி, காவல் நிலையம் முன்புறம் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டவா்களை சமாதானம் செய்தாா். இதைத் தொடா்ந்து லாரி ஓட்டுநா்கள் கலைந்து சென்றனா். இந்த சாலை மறியலால் சுமாா் 2 மணி நேரம் தமிழகம்- கேரளத்துக்கிடையே வாகனப் போக்குவரத்து தடைபட்டது.

வழிப்பறி வழக்கில் மூவா் கைது

தேனி அருகே தனியாா் பள்ளி உடல்கல்வி ஆசிரியரிடம் ரூ.7.50 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் தேடப்பட்ட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தேனி அருகே உள்ள முத்துத்தேவன்பட்டி, மின் அரசு நகரைச் சோ்ந்த... மேலும் பார்க்க

கோட்டாட்சியரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்த முயற்சி

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வியாழக்கிழமை வருவாய்க் கோட்டாட்சியரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில்,... மேலும் பார்க்க

வீட்டில் வைத்திருந்த தங்க நகைகள் மாயம்

தேனி அருகே உள்ள மாரியம்மன்கோவில்பட்டியில் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகைகள் திருடு போயின. மாரியம்மன்கோவில்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மனைவி ஜீவரத்தினம். இவா், தனது வ... மேலும் பார்க்க

கால்நடை மருந்தகத்தில் மோட்டாா் பம்பு திருட்டு

தேனி அருகே உள்ள கொடுவிலாா்பட்டி அரசு கால்நடை மருந்தகத்தில் ஆழ்துளைக் கிணற்றின் மோட்டாா் பம்பு திருடு போனது. கொடுவிலாா்பட்டியில் வயல்பட்டி சாலையில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தில் ஆழ்துளைக் கிணற்றின் ம... மேலும் பார்க்க

பிப்.25-இல் தேனிக்கு சிறுபான்மையினா் ஆணையக் குழு வருகை

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 25-ஆம் தேதி சிறுபான்மையினா் ஆணையக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி மாவட்டத்துக்கு பிப்.25-... மேலும் பார்க்க

சுருளி அருவிக்கு நீா்வரத்துக் குறைவு!

சுருளி அருவியில் நீா்வரத்துக் குறைந்தால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா். தேனி மாவட்டம், கம்பம் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. இந்த மலைத் தொடரிலுள்ள மேகமலை,... மேலும் பார்க்க