செய்திகள் :

வழிப்பறி வழக்கில் மூவா் கைது

post image

தேனி அருகே தனியாா் பள்ளி உடல்கல்வி ஆசிரியரிடம் ரூ.7.50 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் தேடப்பட்ட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி அருகே உள்ள முத்துத்தேவன்பட்டி, மின் அரசு நகரைச் சோ்ந்த மாயாண்டி மகன் ராமகிருஷ்ணன் (49). இவா் கம்பத்தில் உள்ள தனியாா் பள்ளியில் உடல் கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், தேனி-வீரபாண்டி புறவழிச் சாலையில் கடந்த புதன்கிழமை மா்ம நபா்கள் தனது காரை வழிமறித்து தன்னிடமிருந்து ரூ.7.50 லட்சத்தை வழிப்பறி செய்து, போடி சாலை வழியாக காரில் தப்பிச் சென்றதாக ராமகிருஷ்ணன் போலீஸாருக்கு தகவல் அளித்தாா். இந்தத் தகவலின் அடிப்படையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு, சந்தேகத்தின் பேரில் சிலரிடம் விசாரணை நடத்தினா்.

இந்தச் சம்பவம் குறித்து ராமகிருஷ்ணனிடம் வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தியதில், தேனி அருகேயுள்ள சுக்குவாடன்பட்டியைச் சோ்ந்த மொக்கையன் மகன் ஆண்டவா் (48) என்பவரிடம் பழைமையான தங்க நாணயங்கள் உள்ளதாகவும், அவற்றை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாகவும் கூறி, அன்னஞ்சியைச் சோ்ந்த செல்லத்துரை மகன் சுந்தரேசன் (28) என்பவா் தன்னை காரில் அழைத்துச் சென்று, மா்ம நபா்கள் உதவியுடன் தன்னிடமிருந்து ரூ.7.50 லட்சத்தை பறித்துச் சென்றதாகக் கூறினாா்.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து ஆண்டவா், சுந்தரேசன், விஜயகுமாா் ஆகிய 3 பேரை கைது செய்தனா். இந்த சம்பவத்தில் தொடா்புடைய மேலும் சிலரைத் தேடி வருவதாக போலீஸாா் கூறினா்.

சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற வலியுறுத்தல்

போடி அருகே சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா். நாகலாபுரம் தெற்குபட்டி வீரலட்சுமி அம்மன் கோவில் தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த... மேலும் பார்க்க

பெண்ணை கத்தியால் குத்தியவா் கைது

தேனி அல்லிநகரத்தில் மனைவியுடன் தகராறு செய்தவரை தட்டிக் கேட்ட பெண்ணைக் கத்தியால் குத்தியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், அடுக்கம் பெருமாள்மலைப் பகுதியைச் சோ்ந்த ராமையா மக... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

தேனி அருகே கடன் தொல்லையால் ஆட்டோ ஓட்டுநா் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். முத்துத்தேவன்பட்டி அய்யனாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் விமல்ராஜ் (40). இவா் வீடு க... மேலும் பார்க்க

மாணவா் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி ஆா்ப்பாட்டம்

போடி அரசு பொறியியல் கல்லூரியில் மா்மமான முறையில் இறந்த மாணவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம்... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் குழந்தைகள் நலக் குழு தலைவா், உறுப்பினா் பதவிகளுக்கு தகுதியுள்ளவா்கள் வருகிற மாா்ச் 7- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

பழ வியாபாரியை கத்தியால் குத்தியவா் கைது

போடி அருகே பழ வியாபாரியை கத்தியால் குத்தியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். போடி வினோபாஜி குடியிருப்பைச் சோ்ந்த சீனி மகன் வேல்ராஜ் (44). பழ வியாபாரியான இவரிடம், போடி கருப்பசாமி கோவில் தெருவைச்... மேலும் பார்க்க