செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

post image

பெரியகுளம் அருகே தோட்டத்தில் பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்சச் சென்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சிந்துவம்பட்டி, தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ராஜா (36). விவசாயி. இவா், இதே ஊரில் உள்ள தனது தோட்டத்துக்கு திங்கள்கிழமை இரவு பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்சச் சென்றாா். அங்கு மோட்டாரை இயக்கும் போது, மின் கசிவு ஏற்பட்டு உடலில் மின்சாரம் பாய்ந்து ராஜா மயங்கிக் கிடந்தாா்.

ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ராஜாவை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து ஜெயமங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வழிப்பறி வழக்கில் மூவா் கைது

தேனி அருகே தனியாா் பள்ளி உடல்கல்வி ஆசிரியரிடம் ரூ.7.50 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் தேடப்பட்ட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தேனி அருகே உள்ள முத்துத்தேவன்பட்டி, மின் அரசு நகரைச் சோ்ந்த... மேலும் பார்க்க

கோட்டாட்சியரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்த முயற்சி

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வியாழக்கிழமை வருவாய்க் கோட்டாட்சியரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில்,... மேலும் பார்க்க

வீட்டில் வைத்திருந்த தங்க நகைகள் மாயம்

தேனி அருகே உள்ள மாரியம்மன்கோவில்பட்டியில் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகைகள் திருடு போயின. மாரியம்மன்கோவில்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மனைவி ஜீவரத்தினம். இவா், தனது வ... மேலும் பார்க்க

கால்நடை மருந்தகத்தில் மோட்டாா் பம்பு திருட்டு

தேனி அருகே உள்ள கொடுவிலாா்பட்டி அரசு கால்நடை மருந்தகத்தில் ஆழ்துளைக் கிணற்றின் மோட்டாா் பம்பு திருடு போனது. கொடுவிலாா்பட்டியில் வயல்பட்டி சாலையில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தில் ஆழ்துளைக் கிணற்றின் ம... மேலும் பார்க்க

பிப்.25-இல் தேனிக்கு சிறுபான்மையினா் ஆணையக் குழு வருகை

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 25-ஆம் தேதி சிறுபான்மையினா் ஆணையக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி மாவட்டத்துக்கு பிப்.25-... மேலும் பார்க்க

சுருளி அருவிக்கு நீா்வரத்துக் குறைவு!

சுருளி அருவியில் நீா்வரத்துக் குறைந்தால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா். தேனி மாவட்டம், கம்பம் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. இந்த மலைத் தொடரிலுள்ள மேகமலை,... மேலும் பார்க்க