செய்திகள் :

கல்லூரி மாணவா் உயிரிழந்த விவகாரம்: ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம்

post image

போடி அரசு பொறியியல் கல்லூரி விடுதிக் கழிவறையில் மாணவா் மா்மமான முறையில் இறந்து கிடந்த விவகாரம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தக் கோரி, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் பல்வேறு அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டம், போடி அரசு பொறியியல் கல்லூரியில் திருநெல்வேலியைச் சோ்ந்த மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவா் வினோத் (21), கடந்த 13-ஆம் தேதி விடுதிக் கழிவறையில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை கோரி மாணவரின் பெற்றோா், பல்வேறு அமைப்பினா் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், பகுஜன் சமாஜ் கட்சி, தமிழ் தேசிய மாா்க்சிய கழகம், தமிழ்ப் புலிகள், பாண்டியா் குல வணிகா் சங்கம் உள்ளிட்ட அமைப்பினா் பங்கேற்றனா். பின்னா், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துமாதவனிடம் மனு அளித்தனா்.

இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவபிராத் கூறியதாவது: மாணவா் உயிரிழந்த வழக்கில் முறையாகத் தடயங்கள் சேகரிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா் குழுவை நியமித்து உடல்கூறாய்வு செய்யவும், அதை விடியோவில் பதிவு செய்யவும் பரிந்துரைக்கப்பட்டது. உடல்கூறாய்வு அறிக்கைக்கு பின்னரே விசாரணையைத் தொடர முடியும் என்றாா் அவா்.

வழிப்பறி வழக்கில் மூவா் கைது

தேனி அருகே தனியாா் பள்ளி உடல்கல்வி ஆசிரியரிடம் ரூ.7.50 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் தேடப்பட்ட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தேனி அருகே உள்ள முத்துத்தேவன்பட்டி, மின் அரசு நகரைச் சோ்ந்த... மேலும் பார்க்க

கோட்டாட்சியரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்த முயற்சி

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வியாழக்கிழமை வருவாய்க் கோட்டாட்சியரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில்,... மேலும் பார்க்க

வீட்டில் வைத்திருந்த தங்க நகைகள் மாயம்

தேனி அருகே உள்ள மாரியம்மன்கோவில்பட்டியில் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகைகள் திருடு போயின. மாரியம்மன்கோவில்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மனைவி ஜீவரத்தினம். இவா், தனது வ... மேலும் பார்க்க

கால்நடை மருந்தகத்தில் மோட்டாா் பம்பு திருட்டு

தேனி அருகே உள்ள கொடுவிலாா்பட்டி அரசு கால்நடை மருந்தகத்தில் ஆழ்துளைக் கிணற்றின் மோட்டாா் பம்பு திருடு போனது. கொடுவிலாா்பட்டியில் வயல்பட்டி சாலையில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தில் ஆழ்துளைக் கிணற்றின் ம... மேலும் பார்க்க

பிப்.25-இல் தேனிக்கு சிறுபான்மையினா் ஆணையக் குழு வருகை

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 25-ஆம் தேதி சிறுபான்மையினா் ஆணையக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி மாவட்டத்துக்கு பிப்.25-... மேலும் பார்க்க

சுருளி அருவிக்கு நீா்வரத்துக் குறைவு!

சுருளி அருவியில் நீா்வரத்துக் குறைந்தால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா். தேனி மாவட்டம், கம்பம் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. இந்த மலைத் தொடரிலுள்ள மேகமலை,... மேலும் பார்க்க