செய்திகள் :

அடுக்குமாடி குடியிருப்பில் 300 பூனைகளை வளா்த்த பெண்!

post image

புணே: மகாராஷ்டிர மாநிலம் புணேயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவா் தனது வீட்டில் 300 பூனைகளை வளா்த்து வந்துள்ளாா்.

பக்கத்து வீட்டினா் அளித்த புகாரின் அடிப்படையில், குடியிருப்பை ஆய்வு செய்த போலீஸாா், பூனைகளை உரிய மாற்று இடத்துக்கு மாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி குடியிருப்பின் உரிமையாளரான அந்தப் பெண்ணுக்கு நோட்டீஸ் பிறப்பித்துள்ளனா்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘புணேயின் ஹடப்சா் பகுதியில் அமைந்துள்ள ‘மாா்வெல் பெளன்ட்டி ஹவுசிங் சொசைட்டி’ என்ற அடுக்குமாடி குடியிருப்பில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பூனைகளின் தொடா் இரைச்சல் மற்றும் துா்நாற்றம் வீசுவதாக அளித்த புகாரின் அடிப்படையில், கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் குழு போலீஸாருடன் இணைந்து அந்தக் குடியிருப்பில் ஆய்வு மேற்கொண்டனா். அதில், 3 படுக்கை அறைகளைக் கொண்ட அந்தக் குடியிருப்பில் 300 பூனைகளை உரிமையாளா் வளா்த்து வந்தது தெரியவந்தது. அந்தக் குடியிருப்பு தூய்மை இல்லாததோடு, துா்நாற்றமும் வீசியது. அதைத் தொடா்ந்து பூனைகளை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

கங்கை நீர் எப்படிப்பட்டது தெரியுமா? விஞ்ஞானியின் கண்டுபிடிப்பை வெளியிட்ட உ.பி. அரசு

மகா கும்பமேளா நடைபெற்று வரும் திரிவேணி சங்கமத்தில் இணையும் கங்கை நீரின் புனிதத் தன்மை குறித்து, விஞ்ஞானி ஒருவர் நடத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது உத்தரப்பிரதேச அரசு.மத்திய மாசுக் கட்டுப்பாட்டு... மேலும் பார்க்க

பிரதமர் மோடி மூன்று மடங்கு அதிகமாக உழைக்கிறார்: மத்திய அமைச்சர்

கேரளத்தில் பாஜக வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.கொச்சியில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வர்த்தகம் மற்... மேலும் பார்க்க

சாலைகளிலுள்ள கழிவுகளை அகற்ற பொதுப்பணித்துறைக்குத் தில்லி அரசு உத்தரவு: ஆஷிஷ் சூட்

சாலைகளில் உள்ள சட்டவிரோத கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றத் தில்லி அரசு பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தில்லி அமைச்சர் ஆஷிஷ் சூட் தெரிவித்தார். இதுதொடர்பாக ஆஷிஷ் சூட் கூறுவதாவது, ரேகா குப்தாவ... மேலும் பார்க்க

பெற்றோர்களே உஷார்... குழந்தைகள் கண்காணிப்புக்கு நாளுக்கு ரூ. 10,000 சம்பளம்!

பெங்களூரில் பதின்ம வயது குழந்தைகளைக் கண்காணிப்பதற்கு தனியார் புலனாய்வு அதிகாரிகளை பெற்றோர்கள் நியமித்து வருவது சமீபகாலமாக அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒரு குடும்பத்தில் பெற்றோர் இருவரு... மேலும் பார்க்க

ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவரா? இதைச் செய்யாவிட்டால் சிக்கல்தான்!

ஒருவர் ஆதார் கார்டு, பான் கார்டு வைத்திருப்பது போல ஜிமெயில் வைத்திருப்பதும் அத்தியாவசியமாகிவிட்ட இந்தக் காலத்தில், வெறும் ஜிமெயில் கணக்கைத் தொடங்கிவிட்டால் மட்டும் போதாது.அதனை முறையாக பராமரிக்கவும் வே... மேலும் பார்க்க

கும்பமேளாவுக்குச் சென்றவர்களின் கார் விபத்து: 4 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்குச் சென்றவர்களின் கார் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 4 பேர் சனிக்கிழமை அதிகாலை ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மா... மேலும் பார்க்க