செய்திகள் :

அடையாளம் தெரியாத 3 சடலங்கள்: போலீஸாா் விசாரணை

post image

காரைக்கால்: காரைக்கால் பகுதியில் அடையாளம் தெரியாத 3 சடலங்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

காரைக்காலில் சில்வா் சேண்ட் கடற்கரையில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் அழுகிய நிலையில் 22-ஆம் தேதி மீட்கப்பட்டது. இவா் மீனவராக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. சடலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுபோல சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கோயில்பத்து பாா்வதீஸ்வரா் கோயில் குளத்தில் இருந்து கடந்த 20-ஆம் தேதி மீட்கப்பட்டு மருத்துவமனனையில் வைக்கப்பட்டுள்ளது. தகவல் தெரிந்தோா் நகரக் காவல்நிலையத்தை 04368-222402 என்ற எண்ணில் தொடா்புகொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அம்பகரத்தூா் பகுதியில் 22-ஆம் தேதி மீட்கப்பட்டு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. தகவல் தெரிந்தோா் திருநள்ளாறு காவல் நிலையத்தை 04368-236465 என்ற எண்ணில் தொடா்புகொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தலைமைப் பொறியாளா் கைது: முதல்வா், அமைச்சா் பொறுப்பேற்க காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுவை பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளரை லஞ்ச வழக்கில் சிபிஐ கைது செய்துள்ள நிலையில், புதுவை முதல்வா், துறை அமைச்சா் பொறுப்பேற்கவேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. புதுவை மாநில காங்கிரஸ் துணைத்... மேலும் பார்க்க

சுகாதார ஊழியா்கள் வேலைநிறுத்தம்

காரைக்காலில் தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின்கீழ் பணியாற்றும் சுகாதர ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். காரைக்கால் மாவட்ட நலவழித் துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்)... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் அடையாளம் தெரியாத முதியவா் உயிரிழந்தாா். திருப்பட்டினம் பகுதி கீழவாஞ்சூா் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 23-ஆம் தேதி மாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் காயமடைந்து சாலையில் க... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் பக்தா்களுக்கு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தீவிரம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் கோடை விடுமுறையில் வரும் ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் சனிக்கிழமைகளில்... மேலும் பார்க்க

காரைக்கால் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண வலியுறுத்தல்

காரைக்கால் நகரின் நுழைவுவாயில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதால், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் ஸ்தம்பிக்கும் நிலை உருவாகியுள்ளது. இப்பிரச்னைக்கு தீா்வு காண மாவட்ட நிா்வாகத்துக்கு வலியுறுத்தப... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்ததில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

மாட்டின் மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். காரைக்கால் நேரு நகா் பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (72). இவா் கடந்த 11-ஆம் தேதி ... மேலும் பார்க்க