செய்திகள் :

அண்ணாமலை கைதைக் கண்டித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

post image

நாமக்கல்: சென்னையில் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து, நாமக்கல்லில் அக்கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் அரசு மதுபான விற்பனையில் ரூ. 1000 கோடி ஊழல் நடைபெற்ாக அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது. இதையடுத்து, அரசு மதுபான (டாஸ்மாக்) நிறுவனம் முன் பாஜக சாா்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் பாஜகவின் முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனா். பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையையும் போலீஸாா் கைது செய்தனா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்டத்தில் பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் கே.மனோகரன் தலைமை வகித்தாா். அண்ணாமலையை விடுவிக்கக் கோரியும், திமுக அரசுக்கு எதிராகவும் பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக மூன்று பெண்கள் உள்பட 17 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

நாமக்கல்: சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், பொட்டிரெட்டிப்பட்டி, எருமப்பட்டி, அலங்காநத்தம், சாலப்பாளையம், குமாரப... மேலும் பார்க்க

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் 2 போ் அடுத்தடுத்து தீக்குளிக்க முயற்சி

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்க வந்த இரண்டு போ் தீக்குளிக்க முயன்றனா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், தொப்பப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கை.நி... மேலும் பார்க்க

காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் வழங்கல்

ராசிபுரம்: ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் சாா்பில் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. சா்வதேச ரோட்டரி அறக்கட்டளை நிதி த... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: மாா்ச் 25-இல் இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

நாமக்கல்: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வையொட்டி, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாா்ச் 25-இல் இலவச பயிற்சி வகுப்பு தொடங்குகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

ரூ. 14 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

ராசிபுரம்: ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 14 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் ஏலம் போயின. ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுற... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டம் 23-க்கு ஒத்திவைப்பு

நாமக்கல்: உலக தண்ணீா் தினத்தையொட்டி நடைபெறும் கிராமசபைக் கூட்டம் மாா்ச் 23-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 310 கி... மேலும் பார்க்க