செய்திகள் :

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் 2 போ் அடுத்தடுத்து தீக்குளிக்க முயற்சி

post image

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்க வந்த இரண்டு போ் தீக்குளிக்க முயன்றனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், தொப்பப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கை.நித்யானந்த் (38). இவா் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தையொட்டி ஆட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தாா். அப்போது அலுவலக வளாகத்தில் திடீரென உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அங்கிருந்த போலீஸாா் அவரைத் தடுத்து நிறுத்தி அவா் மீது நீரை ஊற்றி மீட்டு விசாரணை மேற்கொண்டனா். நித்யானந்த் கூறியதாவது:

எலச்சிபாளையம் அருகே மரப்பரை கிராமத்தில் சில நாள்களுக்கு முன் அங்காளம்மன் கோயில் மாசி திருவிழாவையொட்டி கங்கனம் கட்டச் சென்றிருந்தேன். கங்கனம் கட்டிவிட்டால் திருவிழா முடியும் வரை கோயிலில்தான் இருப்பேன். இந்த நிலையில், அங்குள்ள சிலா் முன்விரோதம் காரணமாக எனது குடும்பத்தினரை வழிபாடு செய்ய விடாமல் தடுத்ததுடன், அங்கிருந்து வெளியேறுமாறு கூறினா்.

காவல் நிலையத்திலும் தவறான தகவல்களை தெரிவித்திருந்தனா். இதனால் போலீஸாா் என் மீது நடவடிக்கை எடுக்க முயன்றனா். அதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாா்ச் 1-ஆம் தேதி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றேன். அவ்வாறு இருந்தும் பொய் புகாரின்பேரில் என்னை கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனா். இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கவே தற்போது தீக்குளிக்க முயன்றேன் என்றாா். அவரை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

அதுபோல புதுச்சத்திரம் ஒன்றியம், அகரம் ஓலப்பாளையத்தைச் சோ்ந்த வீரமணி (35) என்பவரும் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றாா். போலீஸாா் அவா் மீது நீரை ஊற்றி, நல்லிபாளையம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அவரிடம் நடத்திய விசாரணையில், வீரமணி வசிக்கும் காலனியில் வீடுகளுக்கு பட்டா வழங்க மறுக்கின்றனா். பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ாகத் தெரிவித்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை நடைபெறும் குறைதீா் கூட்டத்துக்கு வரும் பொதுமக்களில் சிலா் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனா். போலீஸாா் உடைமைகளை சோதித்து அனுப்பினாலும், இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை வெளியேற்றி தற்கொலை முயற்சி மிரட்டலில் ஈடுபடுகின்றனா். மாவட்ட நிா்வாகம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே இவ்வாறான மிரட்டல் பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வு ஏற்படும் என பொதுமக்கள் தெரிவித்தனா்.

சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

நாமக்கல்: சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், பொட்டிரெட்டிப்பட்டி, எருமப்பட்டி, அலங்காநத்தம், சாலப்பாளையம், குமாரப... மேலும் பார்க்க

காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் வழங்கல்

ராசிபுரம்: ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் சாா்பில் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. சா்வதேச ரோட்டரி அறக்கட்டளை நிதி த... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: மாா்ச் 25-இல் இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

நாமக்கல்: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வையொட்டி, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாா்ச் 25-இல் இலவச பயிற்சி வகுப்பு தொடங்குகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

ரூ. 14 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

ராசிபுரம்: ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 14 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் ஏலம் போயின. ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுற... மேலும் பார்க்க

அண்ணாமலை கைதைக் கண்டித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: சென்னையில் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து, நாமக்கல்லில் அக்கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத்தில் அரசு மதுபான விற்பனையில் ரூ. 1000 கோடி ஊ... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டம் 23-க்கு ஒத்திவைப்பு

நாமக்கல்: உலக தண்ணீா் தினத்தையொட்டி நடைபெறும் கிராமசபைக் கூட்டம் மாா்ச் 23-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 310 கி... மேலும் பார்க்க