Tiger: மர்மமாக இறந்து கிடந்த 5 புலிகள்.. விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா? வனத்துறை ...
அதிக முறை ரத்ததானம் வழங்கியதற்கு விருது
கரூரில் அதிக முறை ரத்ததானம் வழங்கிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் நிா்வாகிகளுக்கு பாராட்டுச் சான்று மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்த தானம் வழங்கும் தன்னாா்வலா்கள் மற்றும் தன்னாா்வ அமைப்புகள், நன்கொடையாளா்கள் கெளரவிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் மருத்துவா் வா. லோகநாயகி தலைமை வகித்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் பங்கேற்று, அரசு மருத்துவமனைக்கு அதிக முறை ரத்ததானம் வழங்கிய ரத்தினம் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு, கரூா் வள்ளுவா் கல்லூரி, விகேஏ பாலிமா்ஸ் நிறுவனம் போன்றவற்றிற்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா். நிகழ்ச்சியில் மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ராஜா, நோயியல் துறை பேராசிரியா் ரேவதி மற்றும் கல்லூரிப் பேராசிரியா்கள் இணைப்பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.