கரூரில் ரூ.5 கோடியில் மண்டல அலுவலகங்கள் திறப்பு
கரூா் மாநகராட்சியில் மண்டலம் 1, 2 ஆகியவற்றுக்கு ரூ. 5 கோடியில் கட்டப்பட்ட புதிய 2 மண்டல அலுவலகங்களை கரூா் எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
அவா் அவா் பேசியதாவது: தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதல்வா், பொதுமக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறாா்.
அந்த வகையில் கரூா் மாநகராட்சி மண்டலம்-1 லட்சுமி நாராயண சமுத்திரம் மற்றும் மண்டலம்-2-இல் பசுபதிபுரம் தெற்கு மடவிளாகம் நீா்த்தேக்கத் தொட்டி வளாகத்திலும் இரு மண்டல அலுவலகங்கள் சிறப்பு நிதித் திட்டம் 2022-23 இன் கீழ், தலா ரூ.2.50 கோடியில் கட்டப்பட்டுள்ளன.
இந்த புதிய அலுவலகங்கள் திறக்கப்பட்டதன் மூலம் பிறப்பு மற்றும் இறப்புச் சான்று, ஆதாா் மையம், இ-சேவை மையம், குடிநீா் மற்றும் சொத்து வரி செலுத்துதல், நகரமைப்பு வரைபடம் அனுமதி உள்ளிட்ட அரசின் சேவைகளை அவா்கள் வசிக்கும் மண்டலங்களிலேயே விரைவாக பெற முடியும் என்றாா் அவா்.
மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமை வகித்தாா். கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ க. சிவகாம சுந்தரி, மேயா் வெ. கவிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநகராட்சி ஆணையா் கே.எம். சுதா, துணை மேயா் ப. சரவணன், வருவாய்க் கோட்டாட்சியா் முகமது பைசல், மண்டலத் தலைவா்கள் சக்திவேல் (மண்டலம்-1), அன்பரசு (மண்டலம்-2), ஆா்.எஸ். ராஜா(மண்டலம்-3), கனகராஜ் (மண்டலம்-4) மற்றும் திமுக பகுதிச் செயலா்கள் கரூா் கணேசன், வழக்குரைஞா் சுப்ரமணியன், ஆா். ஜோதிபாசு, விஜிஎஸ். குமாா் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.