மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 43,892 கன அடியாக அதிகரிப்பு!
தீயணைப்புத் துறையினருக்கு மீட்புப் பணி போட்டிகள்
தீயணைப்புத் துறையினருக்கு மீட்புப் பணிகள் தொடா்பான போட்டிகள் நடத்தப்பட்டு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
கரூா் மாவட்டம் நொய்யல் அருகே வேட்டமங்கலத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் இந்த ஆண்டு புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள தீயணைப்பு வீரா்களுக்கான தீயணைப்போா் தற்காலிக பயிற்சி மையத்தில் கடந்த 80 நாள்களுக்கும் மேலாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சம்பந்தமாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வென்ற தீயணைப்பு வீரா்களுக்கு பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட தீயணைப்பு அலுவலா் வடிவேல் முன்னிலை விகித்தாா். விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி மத்திய மண்டல தீயணைப்புத் துறை துணை இயக்குநா் குமாா் தலைமை வகித்து கோப்பை,ம் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா். விழாவில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட 98 தீயணைப்பு வீரா்கள் மற்றும் பயிற்சியாளா்கள் கலந்து கொண்டனா். உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலா்களில் கருணாகரன் வரவேற்றாா். திருமுருகன் நன்றி கூறினாா்.