செய்திகள் :

அதிகரிக்கும் தெருநாய்களின் எண்ணிக்கை: முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த 5 முக்கிய உத்தரவுகள் என்னென்ன?

post image

தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்தியாவில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 13 லட்சம் தெரு நாய்கள் உள்ளதாகவும், நாய்க்கடி பிரச்னைகளால் ரேபிஸ் பாதிப்பும் அதிகரித்து வருவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

முதல்வர் ஸ்டாலின்

எனவே தெரு நாய்க்கடி தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என். நேரு, மா. சுப்பிரமணியன் உள்ளிட்ட முக்கிய துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். அதில், தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவது, கருத்தடை செய்வது, கண்காணிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார்.

* அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் நாய்கள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

* கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் அதன் விரிவாக்க மையங்களில் கருத்தடை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

நாய் கடி
நாய் கடி

* உடல்நலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை மீட்டு சிகிச்சை அளிக்க காப்பகங்களை உருவாக்க வேண்டும்.

* நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

* அனைத்து துறைகளும் இணைந்து நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பாதுகாப்பைத் திரும்பப் பெற்ற தமிழக அரசு; `உயிருக்கு அச்சுறுத்தல்' என நீதிமன்றத்தில் ஆஜராகாத சகாயம்!

மதுரை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராகவும். பல்வேறு துறைகளில் உயரதிகாரியாகவும் பணியாற்றியவர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம். இவர், மதுரை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய காலத்தில் கிரானைட... மேலும் பார்க்க

போர் பதற்றம், வான்வழி மூடல்... Air India நிறுவனத்தின் செலவீனங்கள் ரூ.5000 கோடி அதிகரிப்பு?

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் நிலவி வருகிறது. இதனிடையே, பாகிஸ்தான் இந்திய விமானங்களுக்கு தனது வான் வழியை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இதனால் ஏர் இந்தியா நிறுவனம் பெறும் நட்டத்தைச் சந்தி... மேலும் பார்க்க

பதிவாளர் அலுவலக கழிவறையில் ரூ.3 லட்சம்; லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையில் பறிமுதல்; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நஞ்சியம்பாளையம் பகுதியில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் உமா மகேஷ்வரி என்பவர் சார் பதிவாளராகப் பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் முறை... மேலும் பார்க்க

`வேல்முருகன் மாதிரி நாங்க பேசணும்னு எதிர்பார்க்கக் கூடாது..!’ - விசிக ஆளூர் ஷாநவாஸ் ஆவேசம்

``சட்டமன்றத்தை தி.மு.க அரசு மிகுந்த நாகரிகத்தோடு நடத்தியதாக சொல்கிறீர்கள்... பிறகு ஏன் அவை நடவடிக்கைகளை நேரலை செய்யவில்லை?”``சட்டமன்ற நடவடிக்கைகளை நேரலை செய்வோம் என்பது 2021-ல் தி.மு.க-வின் தேர்தல் வா... மேலும் பார்க்க

``சீமானின் 8% வாக்குகளெல்லாம் இப்போது குட்டிச் சுவராகிவிட்டது!" - சொல்கிறார் நாஞ்சில் சம்பத்

``பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது மத்திய அரசு. இதில் பா.ஜ.க-வுக்கு அரசியல் அஜெண்டா இருப்பதாக வீண் பழி சுமத்துகிறீர்களா?”``காஷ்மீரில் பாதுகாப்பை உறுதி செய்வதும், நா... மேலும் பார்க்க

தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கு; தந்தையின் பிழற்சாட்சி; தாயை கொலை செய்த வழக்கில் தஷ்வந்த் விடுதலை!

6 வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவு கொலையும் செய்து, தனது சொந்த தாயையும் அடித்துக் கொலை செய்த தஷ்வந்த் வழக்கு தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.2017-ம் ஆண்டு சென்னையை அடுத்த போரூரில் 6 ... மேலும் பார்க்க