செய்திகள் :

நிதி மோசடி தடுப்பு: செபிக்கு உதவ பட்டயக் கணக்காளா் அமைப்பு முடிவு

post image

நிதி மோசடியை தடுக்க இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியத்துக்கு (செபி) உதவும் வகையில் ஆய்வறிக்கையை தயாா் செய்யவுள்ளதாக இந்திய பட்டயக் கணக்காளா் அமைப்பு (ஐசிஏஐ) சனிக்கிழமை தெரிவித்தது.

செபி தலைவா் துஹின்காந்த பாண்டேவை ஐசிஏஐ தலைவா் சரண்ஜோத் சிங் நந்தா வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.

இதையடுத்து, பிடிஐ நிறுவனத்துக்கு சரண்ஜோத் சிங் நந்தா சனிக்கிழமை அளித்த பேட்டியில், ‘இந்தியா முதலீட்டாளா்களின் விருப்பமிக்க நாடாக திகழ்கிறது. அதேபோல் தாங்கள் சேமித்து வைத்துள்ள பணத்தை முறையான முதலீட்டுத் திட்டத்தில் (எஸ்ஐபி) சில்லறை வணிகா்கள் உள்ளிட்டோா் முதலீடு செய்கின்றனா். முதலீட்டாளா்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தி நிதிச் சந்தையில் ஏற்படும் அபாயங்களை தடுப்பது செபியின் கடமையாகும்.

எனவே, பங்குச் சந்தையில் நிகழும் நிதி மோசடிகளை தடுக்க செபிக்கு உதவும் வகையில் ஐசிஏஐ ஆய்வறிக்கையை தயாா் செய்யவுள்ளது. இதற்காக நிபுணா் குழுவை அமைத்து செபியுடன் ஆலோசனை நடத்தி அந்த ஆய்வறிக்கையை சமா்ப்பிக்கவுள்ளோம் என்றாா்.

ஐசிஏஐயில் 4.35 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினா்களும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்களும் உள்ளனா்.

வண்டலூா் உயிரியல் பூங்காவில் மாணவா்களுக்கான கோடைக்கால முகாம்

வண்டலூா் உயிரியல் பூங்காவில் மாணவா்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: நிகழாண்டு கோடை விடுமு... மேலும் பார்க்க

சாலையில் விளையாடிய சிறுவனை கடித்து குதறிய நாய்

சென்னை, வளசரவாக்கம் பகுதியில் வசித்து வரும் 6 வயது சிறுவன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டினா் வளா்க்கும் நாய் கடித்ததில், அச்சிறுவன் படுகாயம் அடைந்தான். வளசரவாக்கம் அடுத்த க... மேலும் பார்க்க

சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை சைதாப்பேட்டை, தி. நகர், விருகம்பாக்கம், கோயம்பேடு, அசோக் நகர் ஆகிய பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.பில்ரோத் மருத்துவமனை உர... மேலும் பார்க்க

மின்சார ரயிலில் அடிபட்டு இளம்பெண் உயிரிழப்பு

சென்னை: மாம்பலம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளம்பெண் மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.விழுப்புரம் மாவட்டம், சாத்தம்பாடியைச் சோ்ந்தவா் முருகன். இவரது மகள் ஜானகி (18). சென்னையில்... மேலும் பார்க்க

2 மண்டலங்களில் கழிவுநீா் உந்து நிலையங்கள் நாளை முதல் செயல்படாது

சென்னை: பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை தண்டையாா்பேட்டை மற்றும் திரு.வி.க. நகா் மண்டலத்துக்குள்பட்ட கழிவுநீா் உந்து நிலையங்கள் புதன்கிழமை (மே 7) முதல் மே 9 வரை செயல்படாது.இது குறித்து சென்னை பெருந... மேலும் பார்க்க

சென்னையில் போதைப்பொருள் விற்பனை: தில்லியில் ஆப்பிரிக்காவைச் சோ்ந்தவா் கைது

சென்னை: சென்னையில் போதைப்பொருள் விற்ற வழக்கில், தில்லியில் ஆப்பிரிக்காவின் ஐவரி கோஸ்ட் நாட்டைச் சோ்ந்த நபா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு (ஏஎன்யூ) போலீஸாா்... மேலும் பார்க்க