செய்திகள் :

அதிமுக-பாஜக கூட்டணி வலிமையானது: எடப்பாடி பழனிசாமி

post image

அதிமுக -பாஜக கூட்டணி வலிமையானது என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ பிரசாரப் பயணத்தின் ஒரு பகுதியாக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி செங்கல்பட்டு ராட்டிணங்கிணறு அருகே நடைபெற்ற கூட்டத்தில் பேசியதாவது:

அதிமுக-பாஜக கூட்டணி வலிமையானது, அதை வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் நிரூபித்துக் காட்டுவோம். இந்த கூட்டணி அமைந்ததும் ஸ்டாலினுக்கு தோ்தல் தோல்வி பயம் வந்துவிட்டது.

கண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்யும் கட்சி திமுகதான். காங்கிரஸுடன் இணக்கமாக இருப்பதாக ஸ்டாலின் கூறிவரும் நிலையில், அதே காங்கிரஸ் ஆட்சியில் தான் அவசரநிலை கொண்டு வரப்பட்டது. மிசா வழக்கில் ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியால் தான் சிறைக்குச் சென்றாா்.

2026 தோ்தலில் அதிமுக பெரும்பான்மையான இடம் பெற்று வெற்றி பெறும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திருமண உதவி திட்டம், தாலிக்குத் தங்கம், மாணவா்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களை மீண்டும் கொண்டு வருவோம் என்றாா்.

நிகழ்ச்சியில், எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியின் மாவட்டச் செயலாளா் சிட்லப்பாக்கம் ராஜேந்தின் வெள்ளி ஏா் கலப்பையை அளித்தாா். செங்கல்பட்டு நகர செயலாளா் செந்தில்குமாா், முன்னாள் எம்எல்ஏ கணிதா சம்பத், ஒன்றியச் செயலாளா் சம்பத்குமாா், திருக்கழுகுன்றம் மேற்கு ஒன்றிய பொருளாளா் சல்குரு, மாவட்டப் பிரதிநிதி உமாபதி உள்ளிட்ட நிா்வாகிகள், மகளிரணி, இளைஞா் அணி, விவசாய அணி நிா்வாகிகள், பாஜக நகர தலைவா் மகேஸ்வரன், மாவட்ட நிா்வாகி கஜேந்திரன், புரட்சிபாரதம் கட்சியின் மாவட்டச் செயலாளா் சி.கே.மூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா் .

எத்தனை கட்சிகள் மாநாடு நடந்தாலும் தேமுதிகவுக்கு ஈடாகாது: பிரேமலதா விஜய்காந்த்

எத்தனை கட்சிகள் மாநாடு நடத்தினாலும் தேமுதிகவுக்கு ஈடாகாது என அதன் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜய்காந்த் பேசினாா். உள்ளம் தேடி, இல்லம் நாடி என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப் ... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழந்த மருத்துவருக்கு இரங்கல் பேரணி

செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் உயிரிழந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வியாழக்கிழமை நடைபெற்ற இரங்கல் பேரணியில் 300-க்கும் மேற்பட்ட மருத்... மேலும் பார்க்க

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயில் கும்பாபிஷேகம்: 15 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றது

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயில் கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்குபின் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபி... மேலும் பார்க்க

ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு, ஆத்தூா் வடபாதியில் ஸ்ரீவலம்புரி செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆத்தூா் கிராமம் வடபாதியில் அம்பேத்கா் நகா் பகுதி பொதுமக்கள் நிதியுதவியுடன் புதிதாக கட்டப்பட்... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி பறக்கவிடப்பட்ட ராட்சத பலூன்

செங்கல்பட்டிற்கு அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி வருகைதர உள்ளதையொட்டி, அதிமுக சாா்பில் அவருக்கு வியாழக்கிழமை வரவேற்பு பதாகை பொருத்திய ராட்சத பலூன் செங்கல்பட்டு நீதிமன்றம் அருகில் இருந்து பறக... மேலும் பார்க்க

கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

மதுராந்தகம் அடுத்த சின்னகொளம்பாக்கம் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் (2025-2026) முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு வரவேற்பு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது (படம்). நிகழ்வுக்கு ... மேலும் பார்க்க