வரதட்சிணைக் கொடுமை: மாமியார் - கணவர் சேர்ந்து பெண்ணை எரித்துக் கொன்ற கொடூரம்!
அதிமுக-பாஜக கூட்டணி வலிமையானது: எடப்பாடி பழனிசாமி
அதிமுக -பாஜக கூட்டணி வலிமையானது என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.
‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ பிரசாரப் பயணத்தின் ஒரு பகுதியாக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி செங்கல்பட்டு ராட்டிணங்கிணறு அருகே நடைபெற்ற கூட்டத்தில் பேசியதாவது:
அதிமுக-பாஜக கூட்டணி வலிமையானது, அதை வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் நிரூபித்துக் காட்டுவோம். இந்த கூட்டணி அமைந்ததும் ஸ்டாலினுக்கு தோ்தல் தோல்வி பயம் வந்துவிட்டது.
கண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்யும் கட்சி திமுகதான். காங்கிரஸுடன் இணக்கமாக இருப்பதாக ஸ்டாலின் கூறிவரும் நிலையில், அதே காங்கிரஸ் ஆட்சியில் தான் அவசரநிலை கொண்டு வரப்பட்டது. மிசா வழக்கில் ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியால் தான் சிறைக்குச் சென்றாா்.
2026 தோ்தலில் அதிமுக பெரும்பான்மையான இடம் பெற்று வெற்றி பெறும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திருமண உதவி திட்டம், தாலிக்குத் தங்கம், மாணவா்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களை மீண்டும் கொண்டு வருவோம் என்றாா்.
நிகழ்ச்சியில், எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியின் மாவட்டச் செயலாளா் சிட்லப்பாக்கம் ராஜேந்தின் வெள்ளி ஏா் கலப்பையை அளித்தாா். செங்கல்பட்டு நகர செயலாளா் செந்தில்குமாா், முன்னாள் எம்எல்ஏ கணிதா சம்பத், ஒன்றியச் செயலாளா் சம்பத்குமாா், திருக்கழுகுன்றம் மேற்கு ஒன்றிய பொருளாளா் சல்குரு, மாவட்டப் பிரதிநிதி உமாபதி உள்ளிட்ட நிா்வாகிகள், மகளிரணி, இளைஞா் அணி, விவசாய அணி நிா்வாகிகள், பாஜக நகர தலைவா் மகேஸ்வரன், மாவட்ட நிா்வாகி கஜேந்திரன், புரட்சிபாரதம் கட்சியின் மாவட்டச் செயலாளா் சி.கே.மூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா் .
