செய்திகள் :

'அந்தப் பெண்ணுக்கு ரூ.50,000 கொடுத்தேன்; சம்மனை கிழிப்பதும் கிழிக்காததும் எங்கள் விருப்பம்'- சீமான்

post image
பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய அவர், "விசாரணைக்கு வரமாட்டேன் என்று நான் சொல்லவே இல்லை. வீட்டில் நான் இல்லாதது தெரிந்தும் சம்மனை ஒட்டச் சென்றது ஏன்? சம்மன் நான் படிக்கவா, நாட்டு மக்கள் படிக்கவா? காவல்துறையின் சம்மனை கிழிப்பதும் கிழிக்காததும் எங்கள் விருப்பம். அதற்காக கைது செய்வீர்களா? சம்மனை கிழிக்காமல் பூஜை அறையிலா மாட்ட முடியும்?சம்மனை கிழிப்பது அவ்வளவு பெரிய குற்றமா? ஒரே நேரத்தில் நான்கு சம்மன்களை அனுப்புகிறார்கள்.

சீமான்

நான் ஒருவன்தானே இருக்கிறேன். என்னை எதிர்த்து நின்று அவர்களால் அரசியல் செய்ய முடியவில்லை. என்னை சமாளிக்க முடியாமல் திமுக அரசு அந்தப் பெண்ணை அழைத்து வருகிறது. அந்தப் பெண் பாலியல் புகார் அளித்தால் குற்றம் செய்ததாகி விடுமா? எங்கள் வீட்டில் வேலை செய்த பையன் ஒருவரிடம் நான் சாகப்போகிறேன் என்று சொல்லி அழுதிருக்கிறார். அந்த குரல் செய்தியைக் கேட்ட பிறகு தம்பியை பணம் கொடுக்க சொன்னேன். அந்த குரல் செய்தியை நீங்கள் கேட்டிருந்தால் கூட பாவம் என்று சொல்லி பணம் கொடுத்திருப்பீர்கள்.

உதவி வேண்டும் எனக் கேட்டதால் அந்தப் பெண்ணுக்கு 50,000 ரூபாய் கொடுக்க சொன்னேன். அதைத்தாண்டி அவருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அஞ்சமாட்டேன். 234 தொகுதிகளிலும் திமுக தனித்து போட்டியிட முடியுமா? கருணாநிதி மகனா? பிரபாகரன் மகனா? தனித்து நின்று பார்ப்போம்.

சீமான்

விசாரணைக்கு வரமாட்டேன் என நான் சொல்லவே இல்லை. எனக்கு மார்ச் 8ஆம் தேதி வரை நிகழ்ச்சிகள் இருப்பதால் அதன் பிறகு வருகிறேன் என்றுதான் சொன்னேன். சம்மன் கொடுத்தவுடன் வந்துவிட முடியுமா, எனக்கு நேரம் கிடைக்கும் போதுதானே வர முடியும்" என்று பேசியிருக்கிறார்.

USA -Ukraine: `சத்தமாக பேசுவதை நிறுத்துங்கள்' - வாக்குவாதத்தில் முடிந்த சந்திப்பு- என்ன நடந்தது?

ஒப்பந்தத்தில் கையெழுத்திட...உக்ரைன் போருக்கு அமெரிக்கா செலவு செய்வதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரும்பவில்லை. மேலும், உக்ரைன் அதிபர் போர் என்ற பெயரை காரணம் காட்டி ஆட்சியில் நீடிக்கிறார் என்றும், அவருக்க... மேலும் பார்க்க

Seeman : 'என்னையும் என் குடும்பத்தையும் இப்படி குதறி தின்கிறீர்களே' - உணர்ச்சி வசப்பட்ட சீமான்!

நடிகை கொடுத்த பாலியல் புகாரில் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜரான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விசாரணையை முடித்துவிட்டு நள்ளிரவில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். பத்திரிகையாளர்... மேலும் பார்க்க

ஆஜராகும் சீமான்; வளசரவாக்கத்தில் குவிந்த நாதக-வினர்... 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்க திட்டம்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை ஒருவர் தாக்கல் செய்த பாலியல் புகார் வழக்கில், சீமானிடம் விசாரணை நடத்துமாறு சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, விசார... மேலும் பார்க்க

`ஒரு பைசா கூட Pension வரல; இனியும் பொறுத்திருக்க முடியாது' Jacto Geo venkatesan | M K Stalin

Jacto Geo அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கூட்மைப்பினர் பழைய ஓய்வூதியத் திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த கோரிக்கைகள் குறித்தும் அரசு அதை நிறைவேற்றாதது க... மேலும் பார்க்க

Siddaramaiah: `நம்மை பலவீனப்படுத்தும் முயற்சி' - தொகுதி மறுசீரமைப்பை எதிர்க்க சித்தராமையா அழைப்பு

நாடாளுமன்ற இடங்களுக்கான தொகுதி மறு சீரமைப்பு குறித்த மத்திய அரசின் ஆர்வத்தைக் கண்டித்துள்ளார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா. பாஜகவின் ஆதிக்கத்தை எதிர்க்கும் தென்னிந்திய மாநில மக்களுக்கு வழங்கப்படும்... மேலும் பார்க்க

`உயிர், உரிமை பிரச்னைகளை தமிழ்நாடு எதிர்கொண்டிருக்கிறது; நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும்!' - ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் மார்ச் 3ஆம் தேதி தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் வீடியோ ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.அதில் பேசியிருக்கும் ஸ்டாலின், "பொத... மேலும் பார்க்க