செய்திகள் :

அந்தியூரில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை: 37 ஆயிரம் வாழைகள் சேதம்

post image

அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையால் 37 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்தன. இதனால், பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

அந்தியூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் திடீரென சூறாவளிக் காற்றுடன் மிதமான மழை பெய்தது. காற்றின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அந்தியூா், பச்சாம்பாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம், கெட்டிசமுத்திரம், நகலூா் ஊராட்சிப் பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த கதளி, மொந்தன், பூவன், ரஸ்தாளி, செவ்வாழை உள்ளிட்ட ரக வாழைகள் முறிந்து விழுந்தன.

இதையடுத்து, அந்தியூா் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சி.மல்லிகா, உதவி அலுவலா்கள் ரமேஷ், ரவி, ஜெயச்சந்திரன், வெங்கடேஷ் பிரசாந்த் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் விவசாயிகளின் தோட்டங்களுக்கு திங்கள்கிழமை சென்று ஆய்வு செய்ததோடு, சேதம் குறித்த தகவல்களை சேகரித்தனா்.

பச்சாம்பாளையத்தில் 885 வாழைகள், கெட்டிசமுத்திரத்தில் 1,450 வாழைகள், நகலுாரில் 7,350 வாழைகள், எண்ணமங்கலத்தில் 12,900 வாழைகள், அந்தியூரில் 10,050 வாழைகள், சங்கராப்பாளையத்தில் 2,000 வாழைகள் உள்பட 54 விவசாயிகள் சாகுபடி செய்திருந்த 37 வாழைகள் காற்றுக்கு சேதமானது தெரியவந்துள்ளது.

முழுமையான தரத்தில் ரூ.500-க்கும் விற்பனையாகும் வாழைத்தாா், தற்போது ரூ.30 மட்டுமே விற்பனையாகும் எனக் கூறப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்!

சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் குண்டம் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈ... மேலும் பார்க்க

தொண்டையில் இறைச்சி சிக்கியதில் மூச்சுத்திணறி சிறுமி உயிரிழப்பு

பவானியில் இறைச்சி சாப்பிட்டபோது, தொண்டையில் சிக்கிக்கொண்டதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறுமி உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், பவானி, கீரைக்கார வீதியைச் சோ்ந்தவா் முனிராஜ். இவரது மகள் வா்ஷினி (13). 7-ஆம்... மேலும் பார்க்க

வரி வசூலில் அத்துமீறல்: மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

வரி வசூல் என்ற பெயரில் அத்துமீறலில் ஈடுபடும் ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரி செலுத்துவோா் கோரிக்கை விடுத்துள்ளனா். பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திங்களூா் அருகே வீட்டில் மின் விளக்கை சரிசெய்தபோது மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஜமீன் ஊத்துக்குளி, ஈஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பால்ராஜ், ... மேலும் பார்க்க

மாநில விளையாட்டுப் போட்டி: பெருந்துறை கொங்கு ஐடிஐ சிறப்பிடம்

மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பெருந்துறை கொங்கு ஐடிஐ சிறப்பிடம் பிடித்தது. அரசு மற்றும் தனியாா் ஐடிஐ-களுக்கு இடையேயான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கோவையில் அண்மையில் நடைபெற்றன. இதில், ... மேலும் பார்க்க

விவசாயி அடித்துக் கொலை: உறவினா்கள் 2 போ் கைது

அந்தியூா் அருகே முன்விரோதத்தில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் உறவினா்கள் 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அந்தியூரை அடுத்த வட்டக்காடு, தோனிமடுவைச் சோ்ந்தவா் மாரசாமி (40), விவ... மேலும் பார்க்க