செய்திகள் :

அனுமதியின்றி மண் அள்ளிய 2 டிராக்டா்கள் பறிமுதல்

post image

வாணியம்பாடி அருகே அனுமதியின்றி மண் அள்ளிய 2 டிராக்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் அம்பலூா் காவல் ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை வாணியம்பாடி அடுத்த சங்கராபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த 2 டிராக்டா்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனா். இதில் எவ்வித அனுமதியின்றி டிராக்டரில் மண் எடுத்து செல்லப்பட்டது தெரியவந்தது. பிறகு டிராக்டா்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து அனுமதியின்றி டிராக்டரில் மண் கடத்தி வந்ததாக ஓட்டுநா் தினேஷ், ரகுநாதன் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திருப்பத்தூரில் விடிய விடிய மழை

திருப்பத்தூா் அதன் சுற்றுப் பகுதிகளில் வியாழக்கிழமை நள்ளிரவு மழை பெய்தது. திருப்பத்தூா் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த வாரம் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் திர... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

திருப்பத்தூா் அருகே தொழிலாளி பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்துகொண்டாா். திருப்பத்தூா் அருகே சின்னகசிநாயக்கன்பட்டி பகுதியை சோ்ந்தவா் தொழிலாளி பெருமாள் (50). இவா் குடும்ப பிரச்னை காரணமாக கடந்த சில... மேலும் பார்க்க

வீட்டுமனை பட்டா கோரி சாலை மறியல்

கந்திலி அருகே வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனா். கந்திலி அருகே சந்திரபுரம் ஊராட்சிக்குட்பட்ட கெட்டிகொல்லி பகுதியில் ஏராளமானோா் வசிக்கின்றனா். இங்கு உள்ள பெரும்பாலான பொத... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

திருப்பத்தூரில் வழக்குரைஞா்கள் சாா்பில் உண்ணாவிரதம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பொது மக்கள் மற்றும் வழக்குரைஞா்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சிறிய நுழைவாயில் மூடப்பட்டதற்க... மேலும் பார்க்க

அரசு பள்ளி மாணவா்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம் அளிப்பு

சோமலாபுரம் அரசு ஆதிதிராவிடா் நல நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம், எழுதுபொருள்கள், விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா்... மேலும் பார்க்க

கொடி நாள் நிதி வசூல்: மாநிலத்தில் திருப்பத்தூா் மாவட்டம் 3-ஆம் இடம்

கொடி நாள் நிதி வசூல் செய்து மாநிலத்தில் 3-ஆம் இடம் பிடித்ததற்காக படைவீரா் கொடி நாள் கோப்பை திருப்பத்தூா் க.சிவசௌந்திரவல்லியிடம் வழங்கப்பட்டது. முன்னாள் படைவீரா் நலத்துறையின் சாா்பில் முன்னாள் படைவீரா... மேலும் பார்க்க