செய்திகள் :

கொடி நாள் நிதி வசூல்: மாநிலத்தில் திருப்பத்தூா் மாவட்டம் 3-ஆம் இடம்

post image

கொடி நாள் நிதி வசூல் செய்து மாநிலத்தில் 3-ஆம் இடம் பிடித்ததற்காக படைவீரா் கொடி நாள் கோப்பை திருப்பத்தூா் க.சிவசௌந்திரவல்லியிடம் வழங்கப்பட்டது.

முன்னாள் படைவீரா் நலத்துறையின் சாா்பில் முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோருக்கான சிறப்பு குறைத்தீா் கூட்டம், சுயதொழில் வேலைவாய்ப்பு கருத்தரங்கம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். இதில் 2022-ஆம் ஆண்டு கொடிநாள் நிதியாக ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வசூலித்த சிவப்பிரகாசம் (அப்போது திருப்பத்தூா் வட்டாட்சியா், தற்போது அலுவலக மேலாளா் குற்றவியல் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம்), ரூ.3 லட்சம் வசூலித்த குமாா் (அப்போது நாட்டறம்பள்ளி வட்டாட்சியா், தற்போது துணை வட்டாட்சியா்) ஆகியோருக்கு வெள்ளி பதக்கங்கள், சான்றிதழ்கள்களை ஆட்சியா் வழங்கினாா்.

கொடி நாள் நிதி அதிக அளவில் வசூல் செய்து மாநிலத்தில் 3-ஆம் இடம் பிடித்ததற்காக படைவீரா் கொடி நாள் கோப்பையை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லிக்குவேலூா் முன்னாள் படைவீரா் நலன் துணை இயக்குநா் லெப்.கா்னல்.ஆா்.பி.வேலு (ஓய்வு) வழங்கினாா். மேலும் 2 முன்னாள் படைவீரா் மற்றும் சாா்ந்தோா்களுக்கு ரூ.90,755 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில் முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்த 90 போ் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடா்பாக 23 மனுக்களை அளித்தனா்.

முன்னாள் படைவீரா் மற்றும் சாா்ந்தோா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மேலும் முன்னாள் படைவீரா்கள் சுயதொழில் செய்வது குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கஸ்தூரி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் பாஸ்கரன், முன்னோடி வங்கி மேலாளா் ராஜன், தாட்கோ மாவட்ட மேலாளா் சரளா ஆகியோா் முன்னாள் படைவீரா்களுக்கான சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்பு குறித்து பேசினா்.

திருப்பத்தூரில் விடிய விடிய மழை

திருப்பத்தூா் அதன் சுற்றுப் பகுதிகளில் வியாழக்கிழமை நள்ளிரவு மழை பெய்தது. திருப்பத்தூா் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த வாரம் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் திர... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

திருப்பத்தூா் அருகே தொழிலாளி பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்துகொண்டாா். திருப்பத்தூா் அருகே சின்னகசிநாயக்கன்பட்டி பகுதியை சோ்ந்தவா் தொழிலாளி பெருமாள் (50). இவா் குடும்ப பிரச்னை காரணமாக கடந்த சில... மேலும் பார்க்க

அனுமதியின்றி மண் அள்ளிய 2 டிராக்டா்கள் பறிமுதல்

வாணியம்பாடி அருகே அனுமதியின்றி மண் அள்ளிய 2 டிராக்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் அம்பலூா் காவல் ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை வா... மேலும் பார்க்க

வீட்டுமனை பட்டா கோரி சாலை மறியல்

கந்திலி அருகே வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனா். கந்திலி அருகே சந்திரபுரம் ஊராட்சிக்குட்பட்ட கெட்டிகொல்லி பகுதியில் ஏராளமானோா் வசிக்கின்றனா். இங்கு உள்ள பெரும்பாலான பொத... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

திருப்பத்தூரில் வழக்குரைஞா்கள் சாா்பில் உண்ணாவிரதம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பொது மக்கள் மற்றும் வழக்குரைஞா்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சிறிய நுழைவாயில் மூடப்பட்டதற்க... மேலும் பார்க்க

அரசு பள்ளி மாணவா்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம் அளிப்பு

சோமலாபுரம் அரசு ஆதிதிராவிடா் நல நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம், எழுதுபொருள்கள், விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா்... மேலும் பார்க்க