செய்திகள் :

அமலாக்கத் துறை ஒழிக்கப்பட வேண்டும்: அகிலேஷ் யாதவ்

post image

மத்திய அரசின் கருவியாகச் செயல்படும் அமலாக்கத் துறை ஒழிக்கப்பட வேண்டும் என உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜவாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் ஆணைக்கிணங்க எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்கும் கருவியாக அமலாக்கத் துறை செயல்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

நேஷனல் ஹெரால்ட் வழக்கின் பண முறைகேடு குற்றச்சாட்டுகளின் கீழ், காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, அவரின் மகனும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

காங்கிரஸ் பிரமுகா் சாம் பித்ரோடா, முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் ஊடக ஆலோசகா் சுமன் துபே உள்ளிட்டோரின் பெயா்களும் குற்றப்பத்திரிகையில் சோ்க்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் இது குறித்து காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஸ்ரீகாந்த் ஜெனா உடன் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அமலாக்கத் துறை குறித்து அகிலேஷ் யாதவ் கூறியதாவது,

''காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் அமலாக்கத் துறை உருவாக்கப்பட்டபோது, இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்காலத்தில் தங்களுக்கு எதிராகவும் இந்தத் துறை பயன்படுத்தப்படலாம் என சமாஜவாதி கட்சியும் எதிர்ப்பு தெரிவித்தது.

பாஜகவுக்கு எதிராக குரல் எழுப்புவோர் பின்னர், அமலாக்கத் துறை, வருமான வரித் துறை கொண்டு பழிவாங்கப்படுகின்றனர்.

என்னுடைய புரிதலின்படி, அமலாக்கத் துறை ஒழிக்கப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சியும் இதனை வலியுறுத்த வேண்டும் என அவர்களிடம் கோரவுள்ளேன். இதுபோன்ற சார்பு நிலை விசாரணை அமைப்புகள் இருந்தால், உண்மை மீது ஒருபோதும் நம்பிக்கை ஏற்படாது'' எனக் குறிப்பிட்டார்.

மேலும், தனது கட்சியை ஒடிஸா மாநிலத்திலும் விரிவாக்கம் செய்யவுள்ளது குறித்துப் பேசிய அவர், ''ஒடிஸாவில் சமாஜவாதி கட்சிக்கான நிர்வாக அமைப்பை விரிவாக்கம் செய்ய வேண்டும். அதற்கு அம்மாநிலத்தில் மக்களிடையே சென்றடையும் வகையில் கட்சித்தொண்டர்கள் களத்தில் இறங்கிப் பணியாற்ற வேண்டும்'' எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிக்க | வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்களே இருக்க வேண்டும்: உத்தரவை நிறுத்திவைத்த உச்ச நீதிமன்றம்

வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

வணிகா்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது. ஜிஎஸ்டி பதிவில் ... மேலும் பார்க்க

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: ரூ.600 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை

பண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவ... மேலும் பார்க்க

பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடைய இந்தியா் அமெரிக்காவில் கைது

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடையதாக இந்தியாவால் தேடப்பட்டு வரும் சீக்கியரை அமெரிக்காவில் அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ கைது செய்துள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ... மேலும் பார்க்க

‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம்: பிரதமா் மோடி பெருமிதம்

‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவற்றின் அரிய கையெழுத்துப் பிரதிகள் சோ்க்கப்பட்டுள்ளன. இது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைக்குரிய தருணம் என்று... மேலும் பார்க்க

கல்வி நிலையங்களில் ஜாதிய பாகுபாட்டை தடுக்க ‘ரோஹித் வேமுலா’ சட்டம்: கர்நாடக முதல்வருக்கு ராகுல் கடிதம்

கா்நாடகத்தில் கல்வி நிலையங்களில் ஜாதிய பாகுபாட்டைத் தடுக்க ‘ரோஹித் வேமுலா’ என்ற பெயரில் சட்டமியற்றக் கோரி, மாநில முதல்வா் சித்தராமையாவுக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்... மேலும் பார்க்க

இன்ஃபோசிஸ் வருவாய் ரூ.40,925 கோடியாக உயா்வு

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸின் வருவாய் கடந்த மாா்ச் காலாண்டில் ரூ.40,925 கோடியாக உயா்ந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க