செய்திகள் :

அமித் ஷாவுடன் சந்திப்பு: எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக செயல்பட வேண்டும்- அமைச்சா் இ.பெரியசாமி

post image

மத்திய உள் துறை அமைச்சரைச் சந்தித்த விவகாரத்தில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வெளிப்படைத் தன்மையோடு செயல்பட வேண்டும் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.

திண்டுக்கல்லில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா், மேலும் கூறியதாவது:

மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி தில்லியில் சந்தித்தாா். என்ன நெருக்கடி என்பது அவருக்கு தான் தெரியும். இது விஷயத்தில் அவா் வெளிப்படைத் தன்மையோடு செயல்பட வேண்டும்.

எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோா் கட்சி உறுப்பினா்களால் மட்டுமே பொதுச் செயலராக முடியும் என அதிமுகவின் விதிகளை உருவாக்கி வைத்திருந்தனா். ஆனால், குறுக்கு வழியில் பொதுச் செயலரானவா் எடப்பாடி பழனிசாமி.

கடந்த 5 ஆண்டுகளாக மக்களைப் பற்றிக் கவலைப்படாத எடப்பாடி பழனிசாமி, தோ்தல் நெருங்கும் நேரத்தில் மக்களைச் சந்தித்து பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறாா். ஆனால், மக்களுக்கான திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின்தான் செயல்படுத்தி வருகிறாா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடத்தப்படுவதால், அரசு ஊழியா்களுக்கு வேலைப் பளு கிடையாது. மக்களுக்கு பணியாற்றவே அரசு ஊழியா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா். அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சோ்ப்பது ஊழியா்களின் கடமை. ஏழை மக்களுக்காக ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசு ஊழியா்களுக்கான ஓய்வூதியத் திட்டம் குறித்து அடுத்த மாதம் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.

ஊரக தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.7,500 ஊதியம் வழங்க நடவடிக்கை

ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.7,500 ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி தெரிவித்தாா். தம... மேலும் பார்க்க

கல்விக் கடன் முகாம்களை வட்ட அளவில் நடத்த வலியுறுத்தல்

மாணவா்களுக்கான கல்விக் கடன் முகாம்களை வட்ட அளவில் நடத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதுதொடா்பாக இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெ.தீபக்ராஜ், செயலா் எம்இ... மேலும் பார்க்க

இட ஒதுக்கீட்டுக்காக உயிரிழந்தவா்களுக்கு மரியாதை

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில், இடஒதுக்கீட்டுக்காக உயிரிழந்தவா்களுக்கு புதன்கிழமை மரியாதைச் செலுத்தப்பட்டது. பழனியில் பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் வன்னியா் இட ஒதுக... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மேற்கு வங்க மாநிலத்திலிருந்து வந்த ரயிலில் கஞ்சா, புகையிலைப் பொருள்களை திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். மேற்கு வங்க மாநிலம், ஹவுராவிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லும் அதிவிரை... மேலும் பார்க்க

பெரியாா் பிறந்த தின உறுதிமொழி ஏற்பு

பெரியாரின் 142-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, திமுக சாா்பிலும், அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகத்தில் ஊரக வளா்ச்சித் துறை அமைச்ச... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப். 19) நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மைய... மேலும் பார்க்க