செய்திகள் :

அம்பேத்கர் குறித்த பாஜகவின் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது: மமதா

post image

அம்பேத்கரை அவமதிக்கும் வகையிலான பாஜகவின் பேச்சு அதிர்ச்சி அளிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விடுமுறையை ரத்து செய்த பாஜகவின் செயல் மிகவும் மோசமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் ஆலன் பார்க் பகுதியில் கொல்கத்தா கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் மமதா பானர்ஜி கலந்துகொண்டார்.

அந்நிகழ்ச்சியில் மமதா பேசும்போது, பாபாசாகேப் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பாஜக கருத்து கூறியுள்ளது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. மாநிலங்களவையில் பாஜகவின் இத்தகையப் பேச்சு சாதிய மற்றும் தலித் மக்களுக்கு எதிரான மனநிலையை காட்டுகிறது.

இதேபோன்று மற்றொரு விஷயமும் அதிர்ச்சி அளிக்கிறது. டிசம்பர் 25 ஆம் தேதி (கிறிஸ்துமஸ் பண்டிகை) விடுமுறை நாளாக இருந்தது. ஆனால், மத்திய அரசு அதனை ரத்து செய்துள்ளது. ஆனால், நாங்கள் அவ்வாறு செய்யமாட்டோம். எங்கள் மாநிலத்தில் டிச. 25 விடுமுறை நாளாகும். ஏனெனில் அனைவரும் அந்த நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் எனக் குறிப்பிட்டார்.

அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் பேச்சு மூலம் பாஜகவின் முகமூடி கிழிந்துள்ளதாக முதல்வர் மமதா பானர்ஜி ஏற்கெனவே தனது எக்ஸ் தளப் பக்கத்தில் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் அலுவலகங்களைச் சூறையாடிய பாஜகவினர்!

மும்பை மற்றும் கொல்கத்தாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களை பாஜகவின் இளைஞர் அணியினர் சூறையாடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மும்பையில் வியாழக்கிழமை (டிச. 19) காங்கிரஸுக்கு எதிரான முழக்கத்தோடு அலுவலகத்தி... மேலும் பார்க்க

காயமடைந்த எம்.பி.க்களிடம் நலம் விசாரித்த மோடி!

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் காயமடைந்த பாரதிய ஜனதா எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாகப் பேசி, நலம் விசாரித்தார். போராட்டத்தில் காயமடைந்த பாஜக எம்.பி.க்கள் பிரதாப் ச... மேலும் பார்க்க

டேய் தகப்பா.. என்னடா இதெல்லாம்... அஸ்வின் நகைச்சுவைப் பதிவு!

அஸ்வின் திடீரென ஓய்வு அறிவிக்க அவமானம் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அஸ்வின் தந்தை கூறியதற்கு அஸ்வின் மறுப்பு தெரிவித்துள்ளார்.அஸ்வினின் திடீர் ஓய்வு குறித்து, அவரது தந்தை அளித்த பேட்டி சமூக வலைதளங்களி... மேலும் பார்க்க

பிரிட்டன் மன்னருடன் பேசிய பிரதமர் மோடி!

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச. 19) தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார். இதில் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மேலும் உறுதிப்படுத்தும் வகையிலான ஆக்கப்பூர்வமான ... மேலும் பார்க்க

ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக இருக்க தகுதியற்றவர்! -பாஜக விமர்சனம்

ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக இருக்க தகுதியற்றவர் என்று பாஜக எம்பியும், மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.அம்பேத்கரை அவமதிப்பு செய்த மத்திய உள்துறை... மேலும் பார்க்க

2025-ல் எந்தப் பங்குகளை வாங்கலாம்? ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் பரிந்துரைக்கும் 28% லாபம் தரும் பங்குகள்!

அடுத்தாண்டில் 28 சதவிகிதம் வரையில் லாபம் தரும் வாங்குவதற்கு உகந்த பங்குகளாக சில பங்குகளை ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் பரிந்துரைத்துள்ளது.நடப்பாண்டின் இரண்டாம் பாதி பங்குச் சந்தைக்கு சாதகமாக இல்லாதவிடினும், ... மேலும் பார்க்க