செய்திகள் :

அம்பேத்கர் மீதான அவதூறு: அமித்ஷா மீதான வழக்கு மார்ச் 1 அன்று விசாரணை!

post image

அம்பேத்கர் குறித்து அவதூறாகப் பேசியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை மார்ச் 1 அன்று நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகாரின் மீதான விசாரணை மார்ச் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இரண்டாவது சாட்சியின் வாக்குமூலத்தை இன்று பதிவு செய்ய முடியாததால் மார்ச் 1 அன்று ஒத்தி வைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | பளு தூக்கும் பயிற்சி: 270 கிலோ எடை கம்பி கழுத்தில் விழுந்து வீராங்கனை பலி!

கடந்த டிசம்பர் 17 அன்று மாநிலங்களவையில் அரசியலமைப்பின் 75 வது ஆண்டு விழா குறித்த விவாதத்தில் பதிலளித்த அமித்ஷா, காங்கிரஸ் மீண்டும் மீண்டும் அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்துவதாக விமர்சித்தார்,

மேலும் அதற்கு பதிலாக கடவுளின் பெயரை அவர்கள் பயன்படுத்தியிருந்தால் சொர்க்கத்தில் இடமாவது கிடைக்கும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், கோடிக்கணக்கான மக்களால்கடவுளாகக் கருதப்படும் ஒரு நபரைப் பற்றி அமித்ஷா அவதூறாகப் பேசியதாகவும், அவரது கருத்துகள் தனது உணர்வுகளை மிகவும் புண்படுத்தியதாகவும் மனுதாரர் ராம் கெலாவன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது சாட்சியின் வாக்குமூலம் பிப்ரவரி 7 அன்று பதிவு செய்யப்படவிருந்தது. ஆனால் வழக்கறிஞர்களின் வேலைநிறுத்தம் காரணமாக விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

முதல் சாட்சியின் வாக்குமூலம் ஜனவரி 23 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது.

அமித்ஷாவின் இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

கங்கை நீர் எப்படிப்பட்டது தெரியுமா? விஞ்ஞானியின் கண்டுபிடிப்பை வெளியிட்ட உ.பி. அரசு

மகா கும்பமேளா நடைபெற்று வரும் திரிவேணி சங்கமத்தில் இணையும் கங்கை நீரின் புனிதத் தன்மை குறித்து, விஞ்ஞானி ஒருவர் நடத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது உத்தரப்பிரதேச அரசு.மத்திய மாசுக் கட்டுப்பாட்டு... மேலும் பார்க்க

பிரதமர் மோடி மூன்று மடங்கு அதிகமாக உழைக்கிறார்: மத்திய அமைச்சர்

கேரளத்தில் பாஜக வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.கொச்சியில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வர்த்தகம் மற்... மேலும் பார்க்க

சாலைகளிலுள்ள கழிவுகளை அகற்ற பொதுப்பணித்துறைக்குத் தில்லி அரசு உத்தரவு: ஆஷிஷ் சூட்

சாலைகளில் உள்ள சட்டவிரோத கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றத் தில்லி அரசு பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தில்லி அமைச்சர் ஆஷிஷ் சூட் தெரிவித்தார். இதுதொடர்பாக ஆஷிஷ் சூட் கூறுவதாவது, ரேகா குப்தாவ... மேலும் பார்க்க

பெற்றோர்களே உஷார்... குழந்தைகள் கண்காணிப்புக்கு நாளுக்கு ரூ. 10,000 சம்பளம்!

பெங்களூரில் பதின்ம வயது குழந்தைகளைக் கண்காணிப்பதற்கு தனியார் புலனாய்வு அதிகாரிகளை பெற்றோர்கள் நியமித்து வருவது சமீபகாலமாக அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒரு குடும்பத்தில் பெற்றோர் இருவரு... மேலும் பார்க்க

ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவரா? இதைச் செய்யாவிட்டால் சிக்கல்தான்!

ஒருவர் ஆதார் கார்டு, பான் கார்டு வைத்திருப்பது போல ஜிமெயில் வைத்திருப்பதும் அத்தியாவசியமாகிவிட்ட இந்தக் காலத்தில், வெறும் ஜிமெயில் கணக்கைத் தொடங்கிவிட்டால் மட்டும் போதாது.அதனை முறையாக பராமரிக்கவும் வே... மேலும் பார்க்க

கும்பமேளாவுக்குச் சென்றவர்களின் கார் விபத்து: 4 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்குச் சென்றவர்களின் கார் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 4 பேர் சனிக்கிழமை அதிகாலை ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மா... மேலும் பார்க்க