செய்திகள் :

அரசு ஊழியா்களுக்கு ஏப். 2-இல் சம்பளம்

post image

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி சம்பளம் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து கருவூலம் மற்றும் கணக்குத் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: தமிழக அரசின் கீழ், 9.30 லட்சம் அரசு ஊழியா்களும், ஆசிரியா்களும் பணிபுரிகின்றனா். மேலும், ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் என்ற வகையில் 7.05 லட்சம் போ் உள்ளனா். அவா்கள் அனைவருக்கும் மாா்ச் மாதத்துக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியங்கள் ஏப்ரல் 2-ஆம் தேதி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

நிகழாண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக, வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருப்பதால், சம்பளமும், ஓய்வூதியமும் 2-ஆம் தேதி வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரமலான் வாழ்த்து

இரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், அறம் பிறழா மனித வாழ்வை வலியுறுத்தும் இரமலான் திரு... மேலும் பார்க்க

ஏடிஎம் கட்டண உயர்வுக்கு முதல்வர் கண்டனம்!

ஏடிஎம் மையங்களில் பரிவர்த்தனை சேவைகள் மீதான கூடுதல் கட்டணத்தை மத்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவி... மேலும் பார்க்க

சென்னைக்கு வந்த விமானத்தில் டயர் வெடித்து விபத்து!

சென்னை: ராஜஸ்தானின் ஜெய்ப்பூரிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு இன்று(மார்ச் 30) காலை வந்த விமானத்தின் டயர் வெடித்து விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக விமானத்திலிருந்தோர் அனைவரும் உயிர்... மேலும் பார்க்க

தமிழகத்தில் ரூ. 500 கோடிக்கு வருமான வரி மோசடி!

தமிழகத்தில் சுமார் 22,500 பேர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாக வருமான வரித் துறை கூறியுள்ளது.தமிழகத்தில் மத்திய, மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த 22,500 ப... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கு. இராசசேகரன்மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து 587 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று(மார்ச் 30) காலை 108.25 அடியில் இருந்து 108.20 அடியாக சரிந்துள்ளது.அணைக்கு வரும் நீரின் ... மேலும் பார்க்க

எரிவாயு டேங்கர் லாரிகள் 4-ஆவது நாளாக இன்றும் வேலைநிறுத்தம்!

நாமக்கல்: எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் 4-ஆவது நாளாக இன்றும்(மார்ச் 30) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வீடுகள், வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு விநியோகம் பாதிக்கப்படும் சூழல் ஏ... மேலும் பார்க்க