`வெறுப்பை உமிழ்வதற்கல்ல சினிமா' - மீண்டும் மீண்டும் முல்லைப் பெரியாறை சீண்டும் க...
எரிவாயு டேங்கர் லாரிகள் 4-ஆவது நாளாக இன்றும் வேலைநிறுத்தம்!
நாமக்கல்: எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் 4-ஆவது நாளாக இன்றும்(மார்ச் 30) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வீடுகள், வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு விநியோகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் புதிய ஒப்பந்தக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வியாழக்கிழமை (மார்ச் 27) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் தென்மண்டல டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை வீடுகள், வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு விநியோகத்தில் ஈடுபட்டுள்ளன. ஒப்பந்த அடிப்படையில் நாடு முழுவதும் 24,000 டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.ஒப்பந்தக் காலம் முடிவடையும் நிலையில், 2025 - 2030ஆம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தக் கட்டுப்பாடுகளை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த 17-ஆம் தேதி எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன், தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் சென்னையில் பேச்சு நடத்தினர். அதன்பிறகும் புதிய கட்டுப்பாடுகளில் பெரிய அளவில் தளர்வு அளிக்கப்படவில்லை.
இதனால், எண்ணெய் நிறுவனங்களின் தென்மண்டலத்துக்கு உள்பட்ட சென்னை, கொச்சி, பாலக்காடு, விசாகப்பட்டினம், மங்களூரு, எடியூர், சரளப்பள்ளி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 இடங்களில் உள்ள கிடங்குகளில் இருந்து எரிவாயுவை எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபடும் இயக்கப்படும் 4,000 டேங்கர் லாரிகளை ஆங்காங்கே நிறுத்தி, வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என்ரு தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஒப்பந்தக் கட்டுப்பாடுகளை தளர்த்தும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என்ரு தெரிவிக்கப்பட்டுள்ளது.