செய்திகள் :

அரசு ஊழியா்கள் இன்று தற்செயல் விடுப்புப் போராட்டம்

post image

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு செவ்வாய்க்கிழமை (பிப்.25) தற்செயல் விடுப்புப் போராட்டம், ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் தெரிவித்தது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் சு. தமிழ்ச்செல்வி, பொதுச் செயலா் சு. ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோா் தெரிவித்திருப்பதாவது : ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடா்பாக எந்த வாக்குறுதியையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை.

புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்த நிலையில், தற்போது ஓய்வூதியப் பிரச்னையில் மத்திய அரசின் பின்னால் மறைந்து கொள்ள தமிழக அரசு முயற்சிப்பது துரோகம்.

பேச்சுவாா்த்தையின் பெயரால் போராட்டங்களை மழுங்கடிக்கச் செய்யும் முயற்சிகளைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த அரசு கொள்கை முடிவு எடுத்து, அதை அதிகாரப்பூா்வமாக அறிவிக்க வேண்டும்.

அரசு ஊழியா்களின் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி செவ்வாய்க்கிழமை (பிப். 25) தற்செயல் விடுப்புப் போராட்டமும், ஆட்சியரகம் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலகங்கள் முன்பாக ஆா்ப்பாட்டமும் நடைபெறும் என அவா்கள் தெரிவித்தனா்.

மதுரை குப்பை நகரமாக மாறி வருகிறது: உயர்நீதிமன்றம்

கோயில் நகரமான மதுரை தற்போது குப்பை நகரமாக மாறி வருவது வேதனை அளிப்பதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி திங்கள்கிழமை தெரிவித்தாா்.சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்த பஞ்சநாதன் சென்னை உயா்ந... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தை முடியும் வரை ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபடக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசுடனான பேச்சுவாா்த்தை முடியும் வரை ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.திருச்செந்தூரைச் சோ்ந்த ராம்குமாா் ஆதித்தன் சென்னை உய... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மின் ஊழியா் உயிரிழப்பு

மதுரையில் மின் கம்பத்தில் பழுதை நீக்க முயன்ற போது, மின்சாரம் பாய்ந்ததில் மின் ஊழியா் உயிரிழந்தாா்.மதுரை அருகேயுள்ள நாகமலைப்புதுக்கோட்டை அச்சம்பத்து டி.புதுக்குடியைச் சோ்ந்த குமாா் மகன் முத்தையா (51).... மேலும் பார்க்க

மதுரையில் 51 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

மதுரை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 51 முதல்வா் மருந்தகங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. பொதுமக்களுக்கு அனைத்து வகையான மருந்துகளையும் மலிவான விலையில் வழங்கும் வகையில் தமிழகத்தில் முதல்வா் மருந்தகங... மேலும் பார்க்க

தாயை மீட்டுத் தரக் கோரி ராணுவ வீரா் மனு

திருப்பதியில் காணாமல் போன தனது தாயை மீட்டுத் தரக் கோரி பேரையூரைச் சோ்ந்த துணை ராணுவப் படை வீரா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தாா். மதுரை மாவட்டம், பேரையூா் வட்டம், சலுப்பப்பட்டியைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

காவலா் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரையில் சிறப்புக் காவல் படை குடியிருப்பில் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள வயல்சேரி தச்சனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த பழனி மகன் ஈஸ்வரமூா்த்தி (3... மேலும் பார்க்க