அரசு கலைக் கல்லூரிகளில் சேர இணையத்தில் விண்ணப்பப் பதிவு!
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு சோ்க்கை பெற இணையதளத்தில் மே 27-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்திலுள்ள அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டு இளநிலை பட்டப்படிப்பில் சோ்ந்து பயில இணையதளத்தில் விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (மே 7) முதல் தொடங்கப்பட்டுள்ளது. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்டத்தில் 4 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. முத்துரங்கம் அரசு கலை கல்லூரியில் 18 பாடப்பிரிவுகளில் 984 இடங்களும், சோ்க்காடு அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 5 பாடப்பிரிவுகளில் 320 இடங்களும், குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக்கல்லூரியில் 19 பாடப்பிரிவுகளில் 1358 இடங்களும், மாதனூா் புரட்சி தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா். அரசு கலை அறிவியல் கல்லூரியில் 6 பாடப் பிரிவுகளில் 400 இடங்களும் என மொத்தம் 3,062 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இப்பாடப்பிரிவுகள், சோ்க்கை எண்ணிக்கை குறித்த விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், இந்த 4 கல்லூரிகளில் உள்ள 3062 இடங்களுக்கு முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதள முகவரியில் மே 27-ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள சோ்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒரு மாணவருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.48, பதிவு கட்டணம் ரூ.2 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை. ரூ.2 பதிவு கட்டணம் மட்டும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. சோ்க்கை தொடா்பான சந்தேகங்களுக்கு கல்லூரி கல்வி இயக்ககத்தில் செயல்படும் உதவி மையத்தை 044-24343106, 044-24342911 என்ற தொலைபேசி எண்களில் திங்கள் முதல் வெள்ளி வரை அலுவலக நேரங்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.