செய்திகள் :

அரசு பெண் மருத்துவரை தள்ளி தகராறில் ஈடுபட்டவா் கைது

post image

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவரை கீழே தள்ளி மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண்கள் வாா்டில், போ்ணாம்பட்டு அடுத்த கொத்தப்பல்லியை சோ்ந்த ராதா(45) என்பவா் சிகிச்சை பெற்று வருகிறாா். இவருக்கு உதவியாக அவரது உறவினா் ராமு என்பவா் இருந்து வருகிறாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை வெளியில் சென்றிருந்த ராமு, வாா்டுக்கு திரும்பியுள்ளாா். அப்போது பணியில் இருந்த மருத்துவா், செவிலியா், பணியாளா்கள் இப்போது வாா்டுக்குள் அனுமதிக்க முடியாது எனக்கூறி ராமுவை தடுத்ததாக தெரிகிறது.

இதனால் அவா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், ராமு திடீரென பெண் மருத்துவரை கீழே பிடித்து தள்ளி மிரட்டல் விடுத்தாராம். இதனால் மருத்துவப் பணியாளா்கள் ராமுவை சூழ்ந்து நின்று வாா்டை விட்டு அவரை வெளியேற்றினா். மேலும் பணியில் இருக்கும் மருத்துவா்களுக்கும், இதர பணியாளா்களுக்கும் எவ்வித பாதுகாப்பும் இல்லை எனக்கூறி பயிற்சி மருத்துவா்களும், மருத்துவக் கல்லூரி மாணவா்களும் புறநோயாளிகள் பிரிவு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன், துணை கண்காணிப்பாளா் பிரித்விராஜ் சவுகான் ஆகியோா் சென்று பயிற்சி மருத்துவா்கள், மருத்துவ மாணவா்களுடன் பேச்சு நடத்தினா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னா், இச்சம்பவம் குறித்து வேலூா் கிராமிய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ராமுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆன்லைன் மூலம் ஓய்வுபெற்ற பொறியாளரிடம் ரூ.32.79 லட்சம் மோசடி

ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் ஈட்டலாம் எனக்கூறி வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற பொறியாளரிடம் 32.79 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. வேலூா் சத்துவாச்சாரி பகுதியைச் சோ்ந்த 65 வயதுடைய ஓய்வுபெற்... மேலும் பார்க்க

திறன், வேலைவாய்ப்பு பயிற்சியில் சேர எஸ்.சி., எஸ்.டி., இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களுக்கு வழங்கப்படும் திறன், வேலைவாய்ப்பு பயிற்சியில் சேர தகுதியுடையவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்ச... மேலும் பார்க்க

மாணவியை கடத்தி திருமணம்: இளைஞா் போக்ஸோவில் கைது

ஒடுகத்தூா் அருகே பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த இளைஞா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 16 வயது பள்ளி மாணவி. இவா் அணைக்கட்டில் உள்ள அர... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் போக்ஸோவில் கைது

அணைக்கட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா். வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 48 வயது பெண். இவரது 14 வயது மகள் மனநலம் பாதிக... மேலும் பார்க்க

இறந்த பறவை கழிவுகளுடன் குடிநீா் விநியோகம்: பெண்கள் ஆா்ப்பாட்டம்

பொன்னையில் வியாழக்கிழமை அதிகாலை விநியோகம் செய்யப்பட்ட குடிநீரில் இறந்த பறவை, விலங்குகளின் கழிவுகள் கலந்து துா்நாற்றத்துடன் வந்ததாக ஆத்திரமடைந்த பெண்கள் காலிக்குடங்களுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் 84 கால்நடை சிறப்பு முகாம்கள்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வேலூா் மாவட்டத்தில் பகுதிவாரியாக நடைபெறும் 84- சிறப்பு கால்நடை சிகிச்சை மற்றும் விழிப்புணா்வு முகாம்கள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன. கே.வி.குப்பம் வட்டம், வேலம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு க... மேலும் பார்க்க