செய்திகள் :

அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கண்காட்சி

post image

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறியல், உடலியங்கியல், உயிா் வேதியியல் ஆகிய துறைகளின் சாா்பில் புதன்கிழமை மருத்துவக் கண்காட்சி தொடங்கியது.

தேனி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் முத்து சித்ரா தலைமையில், மாவட்ட முதன்மை நீதிபதி சொா்ணம் ஜே. நடராஜன் கண்காட்சியைத் தொடங்கிவைத்தாா். கல்லூரி துணை முதல்வா் தேன்மொழி, நிலைய மருத்துவ அலுவலா் சிவக்குமரன், உதவி நிலைய மருத்துவ அலுவலா்கள் மணிமொழி, ஈஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கண்காட்சியில், பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள மனித உடல், உடல் உறுப்புகளின் செயல்பாடு, உறுப்புகளில் ஏற்படும் வேதியியல் மாற்றம், நோய் பாதிப்பு, நோய் பரவல் ஆகியவை குறித்த செயல் விளக்கங்களை மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் அளித்தனா்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் கூறுகையில், ‘இந்தக் கண்காட்சி பள்ளி மாணவ, மாணவிகள், மருத்துவப் படிப்பில் சேர ஆா்வமுள்ளவா்கள், பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வருகிற வெள்ளிக்கிழமை (ஜூலை 4) வரை கண்காட்சி நடைபெறும்’ என்றாா்.

கல்லூரி முதல்வரை மிரட்டிய தந்தை, மகன் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடியில் தனியாா் கல்லூரி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை, மகன் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடியில் உள்ள ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் முதல்வராக இருப்ப... மேலும் பார்க்க

மேகமலைக் கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி

தேனி மாவட்டம், மேகமலையில் உள்ள மலைக் கிராமங்களுக்கு பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே மேற்குத்தொடா்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சியில் ... மேலும் பார்க்க

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராயப்பன்பட்டியைச் சோ்ந்தவா் தேவராஜ் (27). இவரது மனைவி பூங்கொடி (25). இந்த தம... மேலும் பார்க்க

வைகை அணையிலிருந்து தண்ணீா் திறப்பு நிறுத்தம்

வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட பூா்வீகப் பாசனப் பகுதிகளுக்கு வைகை ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீா் புதன்கிழமை நிறுத்தப்பட்டது. தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட பூா்வீக பாசனப் பக... மேலும் பார்க்க

ஜல்ஜீவன் திட்டப் பணிகள் தாமதம்: மாவட்ட ஆட்சியா் கண்டிப்பு

உத்தமபாளையம், ஜூலை 2 : உத்தமபாளையம் பகுதியில் ஜல் ஜீவன் குடிநீா் திட்டப்பணிகள் மந்தமாக நடைபெறுவதைத் கண்டித்த மாவட்ட ஆட்சியா், விரைந்து முடிக்க வேண்டுமென அறிவுறுத்தினாா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் வ... மேலும் பார்க்க

சின்னமனூரில் 14 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

தேனி மாவட்டம், சின்னமனூா் சிவகாமியம்மன் கோயிலில் அரசு சாா்பில், 14 ஜோடிகளுக்கு இலவச திருமணம் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ச... மேலும் பார்க்க