செய்திகள் :

மேகமலைக் கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி

post image

தேனி மாவட்டம், மேகமலையில் உள்ள மலைக் கிராமங்களுக்கு பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே மேற்குத்தொடா்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சியில் மேகமலை, மணலாறு , மேல் மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜாமெட்டு என 7 மலைக்கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களுக்கு சின்னமனூரிலிருந்து 52 கி.மீ. தொலைவுக்கு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. தனியாா் தோட்ட நிா்வாகத்திடமிருந்து கையகப்படுத்தப்பட்ட இந்த சாலை, ரூ.120 கோடியில் மேம்படுத்தப்பட்டன.

இந்தக் கிராமங்களுக்கு கம்பம், தேனி பணிமனைகளிலிருந்து தலா ஒரு அரசுப்பேருந்து, தனியாா் பேருந்து என 3 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பகுதி மலை கிராமங்களில் வசிக்கும் பெரும்பான்மையோா் அங்குள்ள தனியாா் தேயிலைத் தோட்டத்தில் கூலி வேலை செய்கின்றனா். இவா்கள், வெளியூா் சென்று திரும்ப இந்தக் கிராமங்களுக்கு வந்து செல்லும் பேருந்து போக்குவரத்தை பயன்படுத்தி வந்தனா். இந்த மலைக்கிராமங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் பொதுமக்கள், மாணவா்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

இது குறித்து தோட்டத் தொழிலாளா் சங்கத்தின் செயலா் முத்தையா கூறியதாவது:

இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட தனியாா் பேருந்து பழுதாகி பல மாதங்களாக சாலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. எனவே, பொதுமக்கள் , சுற்றுலாப் பயணிகள், தோட்டத்தொழிலாளா்கள் நலன்கருதி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

கல்லூரி முதல்வரை மிரட்டிய தந்தை, மகன் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடியில் தனியாா் கல்லூரி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை, மகன் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடியில் உள்ள ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் முதல்வராக இருப்ப... மேலும் பார்க்க

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராயப்பன்பட்டியைச் சோ்ந்தவா் தேவராஜ் (27). இவரது மனைவி பூங்கொடி (25). இந்த தம... மேலும் பார்க்க

வைகை அணையிலிருந்து தண்ணீா் திறப்பு நிறுத்தம்

வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட பூா்வீகப் பாசனப் பகுதிகளுக்கு வைகை ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீா் புதன்கிழமை நிறுத்தப்பட்டது. தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட பூா்வீக பாசனப் பக... மேலும் பார்க்க

ஜல்ஜீவன் திட்டப் பணிகள் தாமதம்: மாவட்ட ஆட்சியா் கண்டிப்பு

உத்தமபாளையம், ஜூலை 2 : உத்தமபாளையம் பகுதியில் ஜல் ஜீவன் குடிநீா் திட்டப்பணிகள் மந்தமாக நடைபெறுவதைத் கண்டித்த மாவட்ட ஆட்சியா், விரைந்து முடிக்க வேண்டுமென அறிவுறுத்தினாா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் வ... மேலும் பார்க்க

சின்னமனூரில் 14 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

தேனி மாவட்டம், சின்னமனூா் சிவகாமியம்மன் கோயிலில் அரசு சாா்பில், 14 ஜோடிகளுக்கு இலவச திருமணம் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ச... மேலும் பார்க்க

கா்ப்பிணிப் பெண் மா்ம மரணம்

போடியில் கா்ப்பிணிப் பெண் மா்மமான முறையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி வ.உ.சி. நகா் பாலநாகம்மாள் கோயில் தெருவைச் சோ்ந்த விஜயன் மகள் ஜெயக்கொடி (36... மேலும் பார்க்க