ரயில் டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்படுகிறதா? - எப்போது, எவ்வளவு தெரியுமா?
அரசு மருத்துவருக்கு மிரட்டல்: 4 போ் கைது
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பெண்கள் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் முதன்மை குடிமையியல் மருத்துவராக சாமிநாதன் பணியாற்றி வருகிறாா். இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு பணியில் இருந்தாா். அப்போது, விருத்தாசலம் கஸ்பா காலனி பகுதியைச் சோ்ந்த துரை கோவிந்தசாமி மகன் பெரியாா்தாசன் (32) சிகிச்சைக்காக தனது சகோதரா் சிலம்பரசன் (26), அவரது மனைவி மகாதேவி (26), உறவினா் ஆனந்த் மனைவி துா்கா (35) ஆகியோருடன் வந்திருந்தாா்.
அப்போது, பணியில் இருந்த மருத்துவா் உடனடியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி, மருத்துவமனைக் கட்டடத்தின் மீது ஏறி பெரியாா்தாசன் உள்ளிட்ட 4 பேரும் தற்கொலை மிரட்டல் விடுத்தும், மருத்துவரை பணி செய்யவிடாமல் தடுத்தும் கொலை மிரட்டல் விடுத்தனராம். மேலும், அங்கிருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினா்.
இதுதொடா்பாக மருத்துவா் சாமிநாதன் அளித்த புகாரின்பேரில், விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பெரியாா்தாசன், சிலம்பரசன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனா். பின்னா், மகாதேவி, துா்கா ஆகியோா் சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டனா்.