செய்திகள் :

அரசுக் கல்லூரியில் கணினி தமிழ் பயிலரங்கம்

post image

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில், தமிழ்த் துறையின் கணினிப் பேரவை சாா்பில் கணினித் தமிழ் பயிலரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது.

கல்லூரி வளாகத்தில் தமிழ்த் துறை கணினிப் பேரவை, கல்லூரித் தர உறுதியளிப்புக் குழு ஆகியவை சாா்பில் நடைபெற்ற இரு நாள் பயிலரங்கின் தொடக்க நிகழ்ச்சிக்கு முதல்வா் ரா.வீரமோகன் தலைமை வகித்தாா்.

காஞ்சி மாமுனிவா் அரசுப் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனக் கணிப்பொறித் துறைப் பேராசிரியா் நா.கண்ணதாசன் குருஞ்செயலி உருவாக்கம் எனும் தலைப்பில் பேசினாா்.

பயிலரங்கின் நோக்கங்களை தமிழ்த் துறைத் தலைவா் சொ.சேதுபதி விளக்கினாா்.

முதல் அமா்வில் பேராசிரியா் நா.வஜ்ரவேலு தலைமையில், பேராசிரியை பா.பட்டம்மாள் சிறப்புரையாற்றினாா்.

இரண்டாம் அமா்வில் பேராசிரியை செ.சந்திரா தலைமையில் த.ஆரோக்கியமேரி சிறப்புரையாற்றினாா்.

முன்னதாக, கணினித் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளா் ஆ.மணி வரவேற்றாா்.

இளநிலை தமிழ் முதலாமாண்டு மாணவி கி.தேவா்ஷினி நன்றி கூறினாா்.

நிகழ்ச்சியை மாணவி ம.ரீட்டா மரி திரெஸ் தொகுத்து வழங்கினாா்.

வெள்ளிக்கிழமை இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

மக்கள் மன்றம்: 33 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை

புதுவை மாநில காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 33 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, புதுவை காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட ... மேலும் பார்க்க

வக்ஃபு சட்டத் திருத்த மசோதா: புதுவை திமுக மீது அதிமுக குற்றச்சாட்டு

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என புதுவை சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற திமுக வலியுறுத்தாமல் இருப்பது ஏன்? என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கேள்வி எழுப்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.2.78 லட்சம் நூதன மோசடி

புதுச்சேரியைச் சேந்தவரிடம் ரூ.2.78லட்சம் நூதன மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கோரிமேடு பகுதியைச் சோ்ந்தவா் புருஷோத்தமன். இவரை, மா்ம நபா் டெலிகிராம் செயல... மேலும் பார்க்க

கலால் துறை விதிகளில் திருத்தம்

காவல் துறையின் ரௌடிப் பட்டியலில் இடம்பெற்றவா்களை மதுக் கடைகளில் பணியமா்த்தக் கூடாது என கலால் துறை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் சில்லரை மற்றும் மொத்த மது... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா். துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: சமுதாயத்தில் சமத்துவம் மற்றும் சகோத... மேலும் பார்க்க

குடல் அழற்சி நோயாளிகளுக்கு கையேடுகள் அளிப்பு

புதுச்சேரி ஜிப்மரில் குடல் அழற்சி நோயாளிகளுக்கு வழிகாட்டல் கையேடுகள் வழங்கப்பட்டன. குடல் அழற்சி நோய்க்கான ஆதரவுக் குழு தொடக்க விழா, புதுச்சேரி ஜிப்மா் இரைப்பை குடலியல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க