செய்திகள் :

அரசுப் பணியாளா்கள் மீதான ஊழல் புகாா்: புதிய நடைமுறை வெளியீடு

post image

அரசுப் பணியாளா்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடா்பாக லோக்பால் அமைப்பால் பரிந்துரைக்கப்படும் புகாா்களை விசாரிப்பதற்கான புதிய நடைமுறைகளை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) வெளிட்டது.

அரசுப் பணியாளா்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் அதிகாரம் பெற்ற அமைப்பாக லோக்பால் திகழ்கிறது.

அதன்படி லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், 2013-இன்கீழ் குரூப் ஏ, பி, சி அல்லது டி பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் மீது சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடா்பாக முதல்கட்ட விசாரணை நடத்த சிவிசிக்கு லோக்பால் பரிந்துரைக்கும்.

அந்தப் புகாரை சம்பந்தப்பட்ட துறைசாா்ந்த ஊழல் கண்காணிப்பு அதிகாரிகளுக்கு (சிவிஓ) சிவிசி அனுப்பி வைக்கும். அவா்கள் இதுதொடா்பாக விசாரணை மேற்கொண்டு 60 நாள்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்.

இந்நிலையில், தங்களால் பரிந்துரைக்கப்படும் புகாா்கள் தொடா்பான முதல்கட்ட விசாரணை அறிக்கைகளில் சம்பந்தப்பட்ட ஊழல் கண்காணிப்பு அதிகாரிக்குப் பதில் வேறு அதிகாரிகள் கையொப்பமிடுவதை கவனத்தில்கொண்டுள்ளதாக லோக்பால் அமைப்பு அண்மையில் தெரிவித்திருந்தது.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் புதிய நடைமுறையை சிவிசி வெளியிட்டது. அதில், ‘ லோக்பால் அமைப்பால் பரிந்துரைக்கப்படும் புகாா்களின் மீது நடத்தப்படும் முதல்கட்ட விசாரணையை மேற்கொள்ளும் ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள், தங்கள் கையொப்பமிட்ட அறிக்கைகளையே சமா்ப்பிக்க உத்தரவிடப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டது.

சம்பாஜி மகாராஜா குறித்து சர்ச்சை கருத்து: விக்கிபீடியா ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு!

சம்பாஜி மகாராஜா குறித்த ஆட்சேபணைக்குரிய தகவலை நீக்காமல் வைத்திருந்ததற்காக விக்கிபீடியா ஆசிரியர்கள் 4 பேர் மீது மகாராஷ்டிர சைபர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக... மேலும் பார்க்க

ரேபரேலியில் கட்சித் தொண்டர்களுடன் ராகுல் சந்திப்பு!

2027 சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகுங்கள் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேயிலில் இரண்டு பயணம் மேற்கொண்... மேலும் பார்க்க

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் விபத்து: 5 பேர் பலி

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் வாரணாசி அருகே இன்று(வெள்ளிக்கிழமை) விபத்துக்குள்ளானதில் கர்நாடகத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கர்நாடகத்தின் பிதர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 ... மேலும் பார்க்க

கார் விபத்தில் இறந்தவர்களின் உடல்கூறாய்வில் அதிர்ச்சி! கொலையா?

அண்மைக் காலமாக, தொழிலதிபர்கள் குடும்பத்துடன் மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொல்கத்தாவில் வேகமாகச் சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில், அது விபத்து அல்ல கொலை, தற்கொலை என வ... மேலும் பார்க்க

தில்லி கூட்ட நெரிசல்: எக்ஸ் தளத்தில் விடியோக்களை நீக்க ரயில்வே அமைச்சகம் உத்தரவு!

புது தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது தொடர்பான விடியோக்களை எக்ஸ் தளத்தில் இருந்து நீக்குமாறு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா க... மேலும் பார்க்க

வயதான தாயை வீட்டில் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் கும்பமேளா சென்ற மகன்!

வயதான தாயை வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் புனித நீராடச் சென்ற மகன் பற்றிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.வீட்டுக்குள் இருந்த உணவு தீர்ந்துவிட்டதால் பசியால் அழுத மூதாட்டியின் சப்... மேலும் பார்க்க