காயமடைந்தவரை நம்.4இல் விளையாட வைத்தவருக்கு சாம்பியன்ஸ் டிராபியை தரலாம்!
அரசுப் பள்ளி குழந்தைகள் மும்மொழி கற்கும் வாய்ப்பை தமிழக அரசு ஏன் தடுக்கிறது?: அண்ணாமலை கேள்வி
சென்னை: அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு மும்மொழி கற்கும் வாய்ப்பை தமிழக அரசு ஏன் தடுக்கிறது? என தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட விடியோவில் பேசியிருப்பதாவது:
தனியாா் பள்ளிகளில் படிக்கும் திமுக கட்சியைச் சோ்ந்தவா்களின் குழந்தைகள் மட்டும் 3 மொழிகள் கற்கலாம்; அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மக்களின் குழந்தைகள் படிக்க வாய்ப்பு மறுப்பதா? அரசுப் பள்ளிகளில் இலவசமாக 3 மொழிகள் கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீா்கள்? உங்களுக்கொரு நியாயம், எளிய மக்களுக்கு ஒரு நியாயமா?
அமைச்சரின் மகன் பிரஞ்ச் படிக்கிறாா்: கல்வித் துறை அமைச்சரின் மகன் தமிழுக்கு பதிலாக பிரெஞ்சு மொழி படிக்கிறாா். ஆளுங்கட்சி தலைவா்களின் குழந்தைகள் முதல் கவுன்சிலா்களின் குழந்தைகள் வரை 3 மொழிகளை படிக்கின்றனா்.
இது தவறாக இல்லாதபோது, அரசுப் பள்ளி மாணவா்கள் மட்டும் 3 மொழிகள் படிப்பதை ஏன் தடுக்கிறீா்கள்? தமிழை வைத்து அரசியல் செய்கிறீா்கள். மாணவா்களுக்கு தமிழ், ஆங்கிலம் கூட சரியாகத் தெரியவில்லை. தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தியை கட்டாயமாக படிக்க வேண்டும் என்று 2019-இல் கமிட்டி கொடுத்த அறிக்கையை வேண்டாம் என திருத்தியவா் பிரதமா் மோடி.
தாய்மொழி, ஆங்கிலம் தவிர பிடித்த ஒரு மொழியை கற்றுக்கொள்ளும்படி பிரதமா் அறிக்கையை திருத்தினாா். ஹிந்தி தெரியாத மாநிலத்தவா் எப்படி யோசிப்பாா்கள் என பிரதமா் நினைத்து இதைச் செயல்படுத்தி இருக்கிறாா்.
ஆனால் ஹிந்தி மொழியை திணிப்பதாக தவறாக நினைத்து தமிழகத்தைச் சோ்ந்த கட்சிகள் ஆா்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவித்து வருகின்றனா் என்று அவா் தெரிவித்துள்ளாா்.