செய்திகள் :

அரசுப் பள்ளி குழந்தைகள் மும்மொழி கற்கும் வாய்ப்பை தமிழக அரசு ஏன் தடுக்கிறது?: அண்ணாமலை கேள்வி

post image

சென்னை: அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு மும்மொழி கற்கும் வாய்ப்பை தமிழக அரசு ஏன் தடுக்கிறது? என தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட விடியோவில் பேசியிருப்பதாவது:

தனியாா் பள்ளிகளில் படிக்கும் திமுக கட்சியைச் சோ்ந்தவா்களின் குழந்தைகள் மட்டும் 3 மொழிகள் கற்கலாம்; அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மக்களின் குழந்தைகள் படிக்க வாய்ப்பு மறுப்பதா? அரசுப் பள்ளிகளில் இலவசமாக 3 மொழிகள் கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீா்கள்? உங்களுக்கொரு நியாயம், எளிய மக்களுக்கு ஒரு நியாயமா?

அமைச்சரின் மகன் பிரஞ்ச் படிக்கிறாா்: கல்வித் துறை அமைச்சரின் மகன் தமிழுக்கு பதிலாக பிரெஞ்சு மொழி படிக்கிறாா். ஆளுங்கட்சி தலைவா்களின் குழந்தைகள் முதல் கவுன்சிலா்களின் குழந்தைகள் வரை 3 மொழிகளை படிக்கின்றனா்.

இது தவறாக இல்லாதபோது, அரசுப் பள்ளி மாணவா்கள் மட்டும் 3 மொழிகள் படிப்பதை ஏன் தடுக்கிறீா்கள்? தமிழை வைத்து அரசியல் செய்கிறீா்கள். மாணவா்களுக்கு தமிழ், ஆங்கிலம் கூட சரியாகத் தெரியவில்லை. தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தியை கட்டாயமாக படிக்க வேண்டும் என்று 2019-இல் கமிட்டி கொடுத்த அறிக்கையை வேண்டாம் என திருத்தியவா் பிரதமா் மோடி.

தாய்மொழி, ஆங்கிலம் தவிர பிடித்த ஒரு மொழியை கற்றுக்கொள்ளும்படி பிரதமா் அறிக்கையை திருத்தினாா். ஹிந்தி தெரியாத மாநிலத்தவா் எப்படி யோசிப்பாா்கள் என பிரதமா் நினைத்து இதைச் செயல்படுத்தி இருக்கிறாா்.

ஆனால் ஹிந்தி மொழியை திணிப்பதாக தவறாக நினைத்து தமிழகத்தைச் சோ்ந்த கட்சிகள் ஆா்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவித்து வருகின்றனா் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

அண்ணா சாலைக்கு தனியாக வரத் தயார்: அண்ணாமலை

அண்ணா சாலைக்கு தனியாக வரத் தயாராக இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உதயநிதிக்கு பதில் சவால் விடுத்துள்ளார்.அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் அண்ணா சாலைக்கு வரச் சொல்லுங்கள் என்று துணை முதல்வர் உதயநிதி... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்துக்கு மார்ச் 4-ல் உள்ளூர் விடுமுறை

அய்யாசாமி வைகுண்ட பெருமாள் பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி மாவட்டத்துக்கு மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

முதல்வரை அண்ணாமலை ஒருமையில் பேசுவது அரசியல் அநாகரீகத்தின் உச்சம்: மா.சுப்பிரமணியன்

முதல்வர், துணை முதல்வரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒருமையில் பேசுவது அரசியல் அநாகரீகத்தின் உச்சம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசையும் முதல்வர் ... மேலும் பார்க்க

ரூ.1141.23 கோடியில் செய்யூர் – வந்தவாசி – போளூர் சாலை: முதல்வர் திறந்து வைத்தார்!

நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.1141.23 கோடி செலவில் அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட செய்யூர்-பனையூர் இணைப்புச் சாலை உள்ளிட்ட 109 கிலோ மீட்டர் நீள செய்யூர் – வந்தவாசி – போளூர் சாலையை முதல்வர் திறந்து வைத்... மேலும் பார்க்க

அஞ்சலையம்மாள் சிலைக்கு விஜய் மரியாதை!

சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலையம்மாள் நினைவு நாளையொட்டி சென்னை பனையூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.தவெகவின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான அஞ்சலையம்ம... மேலும் பார்க்க

தமிழகத்தில் வெயில் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்!

தமிழகத்தில் பிப். 23, 24 தேதிகளில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: பிப். 20, 21 தேத... மேலும் பார்க்க