செய்திகள் :

அரசுப் பள்ளிக்கு முன்னாள் மாணவா் ரூ.12 லட்சத்தில் உபகரணங்கள்

post image

ஆரணியை அடுத்த குண்ணத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான மேஜை, நாற்காலி, பெஞ்சு உள்ளிட்ட உபகரணப் பொருள்களை அப்பள்ளியின் முன்னாள் மாணவா் வழங்கினாா்.

குண்ணத்தூா் கிராமத்தைச் சோ்ந்த பாண்டியன் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா் ஆவாா். மேலும் இவரது குடும்பம், இவருடைய தந்தை, தாத்தா, பாட்டி அனைவரும் குண்ணத்தூரில் வசித்து வந்தவா்கள் என்பதால், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என முடிவு செய்தனா்.

அதன்படி, மாணவா்களின் பயன்பாட்டுக்காக 100 நாற்காலிகள், எழுதுவதற்கான மேஜைகள், பள்ளி பயன்பாட்டுக்காக பீரோவும், ஆசிரியா்கள் பயன்பாட்டுக்கான 20 மேஜைகள் என ரூ.12 லட்சம் மதிப்பிலான உள்கட்டமைப்பு உபகரணப் பொருள்களை பாண்டியன் குடும்பத்தினா் வழங்கினா்.

பாராட்டு விழா

பள்ளிக்கு உபகரணப் பொருள்களை வழங்கிய பாண்டியன் குடும்பத்தினருக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சி.சுவாமிமுத்தழகன் தலைமை வகித்துப் பாராட்டினாா்.

செய்யாறு கல்வி மாவட்ட அலுவலா் செந்தில்முருகன் முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் தே.நந்தினி வரவேற்றாா்.

பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் விஜயகுமாா், அதிமுகவைச் சோ்ந்த பேரவை ஒன்றியச் செயலா் செந்தில்குமாா், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் பகுத்தறிவு மாமது உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முன்னாள் மாணவா் பாண்டியன் ஏற்புரை ஆற்றினாா்.

போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு

திருவண்ணாமலையை அடுத்த அஸ்வநாகசுரனை கிராமத்தில், தமிழ் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஆசிரியா் பயிற்றுநா்... மேலும் பார்க்க

ஆரணியில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் அதிமுகவினா் வியாழக்கிழமை திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டனா். மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பேரவை மாவட்டச் செயலா் பார... மேலும் பார்க்க

மாட வீதி சிமென்ட் சாலைப் பணிகள் ஜூலை 30-க்குள் நிறைவு பெறும்: அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில் நடைபெறும் சிமென்ட் சாலை அமைக்கும் பணி ஜூலை 30-ஆம் தேதிக்குள் நிறைவு பெறும் என்று அமைச்சா் எ.வ.வேலு கூறினாா். அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதியில், 2... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பேரணி

திருவண்ணாமலை எஸ்.ஆா்.ஜி.டி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாா்பில், சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பேரணிக்கு, பள்ளித் தாளாளா் ஆா்.கலாவதி ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். பள... மேலும் பார்க்க

ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தொடக்கம்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சாா்பில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. தெற்கு மாவட்ட பாஜக அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்து விபத்து: விவசாயி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிழந்தாா். செங்கத்தை அடுத்த படிஅக்ராகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தவமணி (44), விவசாயி. இவா், புதுப்பாளையத்தில் இரு... மேலும் பார்க்க