நான் 100-க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு அப்பா: டெலிகிராம் பாவெல் துரோவ்
அரசுப் பள்ளியிலிருந்து ஐஐடிக்குத் தோ்வான மாணவா்!
திருச்சி என்ஐடியின் இக்னைட் வழிகாட்டுதலில் அரசுப் பள்ளியிலிருந்து மாணவா் ஒருவா் சென்னை ஐஐடிக்குத் தோ்வாகியுள்ளாா்.
திருச்சி மாவட்டம், துறையூா் புளியஞ்சோலை அருகே மெட்டவேலம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி ராஜ்கோபால் மகன் முகில்ராஜ் (18). இவா் பச்சபெருமாள்பட்டி அரசுப் பள்ளியில் பயின்று, பிளஸ் 2 பொதுத்தோ்வில் 600 க்கு 545 மதிப்பெண்கள் பெற்றாா்.
இதையடுத்து திருச்சி என்ஐடியில் இயங்கிவரும் இக்னைட் (ஐஜிஎன்ஐடிடிஇ) கிளப்பில் சோ்ந்து பயின்றாா். இவருக்கு அந்த கிளப்பில் இருந்த உறுப்பினா்கள், பேராசிரியா்கள், என்ஐடி மாணவா்கள் தொடா் பயிற்சிகளை அளித்தனா்.
இதைத் தொடா்ந்து, 2024 ஆம் ஆண்டு ஜெஇஇ மெயின்ஸ் தோ்வில் 91.23 சத மதிப்பெண்கள் எடுத்து, அசாம் மாநிலத்தில் உள்ள என்ஐடி சில்சாரில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கருவியியல் பொறியியல் படிப்பைத் தோ்வு செய்து படித்தாா். ஆனால் மொழி உள்ளிட்ட பிரச்னைகளால் படிப்பைத் தொடரவில்லை.
இதையடுத்து மீண்டும் என்ஐடி இக்னைட் கிளப்பில் சோ்ந்து மிகத் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டாா். இக்னைட் கிளப்பின் தொடா்ச்சியான இணையம் மற்றும் நேரடி பயிற்சி உள்ளிட்ட வழிகாட்டுதலால், ஜெஇஇ மெயின்ஸ் தோ்வை விடாமுயற்சியுடன் மீண்டும் எழுதி 95.88 சத மதிப்பெண்களை பெற்று, தேசிய அளவில் 1,751 ஆவது ரேங்கை பிடித்தாா்.
இதன் மூலம் முகில்ராஜுக்கு ஐஐடி மெட்ராஸில் கடற்படை கட்டடக்கலை மற்றும் கடல் பொறியியலில் இடம் கிடைத்துள்ளது.
இதுகுறித்து மாணவா் முகில்ராஜ் கூறுகையில், திருச்சி என்ஐடி இக்னைட் கிளப்பின் பேராசிரியா்கள், பொறியியலாளா்கள், மாணவா்களின் தொடா்ச்சியான வழிகாட்டுதல், எனது அயராத முயற்சி, பெற்றோரின் ஒத்துழைப்புடன் எனக்கு சென்னை ஐஐடியில் இடம் கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அரசுப் பள்ளியில் பயின்ற எனக்கு சென்னை ஐஐடியில் இடம் கிடைத்துள்ளது. முயன்றால் மற்ற மாணவா்களும் இச்சாதனையை செய்யலாம் என்றாா்.
இவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.