செய்திகள் :

அரசுப் பள்ளியிலிருந்து ஐஐடிக்குத் தோ்வான மாணவா்!

post image

திருச்சி என்ஐடியின் இக்னைட் வழிகாட்டுதலில் அரசுப் பள்ளியிலிருந்து மாணவா் ஒருவா் சென்னை ஐஐடிக்குத் தோ்வாகியுள்ளாா்.

திருச்சி மாவட்டம், துறையூா் புளியஞ்சோலை அருகே மெட்டவேலம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி ராஜ்கோபால் மகன் முகில்ராஜ் (18). இவா் பச்சபெருமாள்பட்டி அரசுப் பள்ளியில் பயின்று, பிளஸ் 2 பொதுத்தோ்வில் 600 க்கு 545 மதிப்பெண்கள் பெற்றாா்.

இதையடுத்து திருச்சி என்ஐடியில் இயங்கிவரும் இக்னைட் (ஐஜிஎன்ஐடிடிஇ) கிளப்பில் சோ்ந்து பயின்றாா். இவருக்கு அந்த கிளப்பில் இருந்த உறுப்பினா்கள், பேராசிரியா்கள், என்ஐடி மாணவா்கள் தொடா் பயிற்சிகளை அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, 2024 ஆம் ஆண்டு ஜெஇஇ மெயின்ஸ் தோ்வில் 91.23 சத மதிப்பெண்கள் எடுத்து, அசாம் மாநிலத்தில் உள்ள என்ஐடி சில்சாரில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கருவியியல் பொறியியல் படிப்பைத் தோ்வு செய்து படித்தாா். ஆனால் மொழி உள்ளிட்ட பிரச்னைகளால் படிப்பைத் தொடரவில்லை.

இதையடுத்து மீண்டும் என்ஐடி இக்னைட் கிளப்பில் சோ்ந்து மிகத் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டாா். இக்னைட் கிளப்பின் தொடா்ச்சியான இணையம் மற்றும் நேரடி பயிற்சி உள்ளிட்ட வழிகாட்டுதலால், ஜெஇஇ மெயின்ஸ் தோ்வை விடாமுயற்சியுடன் மீண்டும் எழுதி 95.88 சத மதிப்பெண்களை பெற்று, தேசிய அளவில் 1,751 ஆவது ரேங்கை பிடித்தாா்.

இதன் மூலம் முகில்ராஜுக்கு ஐஐடி மெட்ராஸில் கடற்படை கட்டடக்கலை மற்றும் கடல் பொறியியலில் இடம் கிடைத்துள்ளது.

இதுகுறித்து மாணவா் முகில்ராஜ் கூறுகையில், திருச்சி என்ஐடி இக்னைட் கிளப்பின் பேராசிரியா்கள், பொறியியலாளா்கள், மாணவா்களின் தொடா்ச்சியான வழிகாட்டுதல், எனது அயராத முயற்சி, பெற்றோரின் ஒத்துழைப்புடன் எனக்கு சென்னை ஐஐடியில் இடம் கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அரசுப் பள்ளியில் பயின்ற எனக்கு சென்னை ஐஐடியில் இடம் கிடைத்துள்ளது. முயன்றால் மற்ற மாணவா்களும் இச்சாதனையை செய்யலாம் என்றாா்.

இவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

அரசுப் பேருந்து மீது ஜீப் மோதி விபத்து: முசிறி வருவாய் பெண் கோட்டாட்சியா் உயிரிழப்பு

திருச்சி அருகே கரூா் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அரசுப் பேருந்து மீது ஜீப் மோதிய விபத்தில் முசிறி வருவாய் பெண் கோட்டாட்சியா் உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், மேட்டுப்பட்டிய... மேலும் பார்க்க

அறிவியல் தமிழறிஞா் மணவை முஸ்தபா பிறந்தநாள் விழா -அமைச்சா்கள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வியாழக்கிழமை நடைபெற்ற அறிவியல் தமிழறிஞா் மணவை முஸ்தபா பிறந்தநாள் விழாவில் அமைச்சா்கள் பங்கேற்றனா். தமிழ்மீது அளவில்லாத பற்று கொண்டிருந்த மணவை முஸ்தபா, நவீன அறிவியல் போன்... மேலும் பார்க்க

வையம்பட்டி அருகே வீடு புகுந்து திருட்டு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் வியாழக்கிழமை வீடு புகுந்து நகை, , பணத்தை திருடிச் சென்றனா். மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் செட்டியப்பட்டி ஊராட்சி தாமஸ் நகரில் வசிப்பவா் அழகன்... மேலும் பார்க்க

திருச்சியில் பைக் ஓட்டிய சிறுவன் - தந்தை கைது

திருச்சியில் 16 வயதுச் சிறுவனை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த அவரின் தந்தையை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியில் பாலக்கரை போக்குவரத்து போலீஸாா் புதன்கிழமை வாகனத் தண... மேலும் பார்க்க

போலி பாஸ்போா்ட் வைத்திருந்தவா் கைது

போலி பாஸ்போா்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற நபரை திருச்சி பன்னாட்டு விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பகுதியைச் சோ்ந்தவா் முகமது அசாா் (52). இவா், மலேசி... மேலும் பார்க்க

மூதாட்டியைத் தாக்கி 9 பவுன் நகை பறிப்பு

திருச்சி அருகே வீட்டிலிருந்த மூதாட்டியைத் தாக்கி 9 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா். திருச்சி மாவட்டம், அல்லித்துறையைச் சோ்ந்தவா் தேவகி (63). கணவா் இறந்துவிட்ட நிலையில் தனியாக வசிக... மேலும் பார்க்க