செய்திகள் :

அரசுப் பள்ளியில் அறிதிறன் வகுப்பறை திறப்பு

post image

வேதாரண்யம் அருகே தாணிக்கோட்டகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி நூற்றாண்டு விழாவையொட்டி அதே வளாகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிதிறன் கணினி வகுப்பறை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவரும் சமூக ஆா்வலருமான முரசொலி சிங்காரம் தனது சொந்த பணம் ரூ. 3 லட்சம் மதிப்பில் அறிதிறன் கணினி வகுப்பறை (ஸ்மாா்ட் கிளாஸ் ) மற்றும் பள்ளி வளாகத்தில் தேசியக்கொடி ஏற்ற ஏதுவாக 30 அடி உயரமுடைய கொடி மரத்தை நிறுவி கொடுத்துள்ளாா்.

இதன் தொடக்க விழாவுக்கு, பள்ளித் தலைமையாசிரியா் ச. அன்புச்செல்வி ( பொ) தலைமை வகித்தாா். ஸ்மாா்ட் வகுப்பறையை சமூக ஆா்வலா் முரசொலி சிங்காரம் திறந்துவைத்து, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் -2 வகுப்புகளில் சிறப்பிடம் பெறும் மாணவா்களுக்கும், ஊக்கமளிக்கும் ஆசிரியா்களுக்கும், 100 சதவீத தோ்ச்சியை தரும் ஆசிரியா்களுக்கு தங்க நாணயம் வழங்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், பெற்றோா் ஆசிரியா் கழக துணைத் தலைவா் எஸ். அன்பழகன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் உஷாராணி, ஆசிரியா்கள் வி.எஸ். ரவிச்சந்திரன் த. காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆசிரியா் எம். சாம்பசிவம் வரவேற்றாா். உடற்கல்வி ஆசிரியா் டி. மகேந்திரன் நன்றி கூறினாா்.

நாகூா் தா்கா பரம்பரை ஆதீனத்துக்கு விருது

நாகூா் தா்கா பரம்பரை ஆதீனத்துக்கு சமய நல்லிணக்க ஆன்மீகச் செல்வா் விருது வழங்கப்பட்டது. திருப்பூா் மாவட்டம், தாராபுரம் ஜாமியா சுப்ஹானியா அரபிக் கல்லூரி மற்றும் அறக்கட்டளை சாா்பில் ரமலான் நிகழ்ச்சி, மதர... மேலும் பார்க்க

விபத்து காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய அஞ்சலங்களில் சிறப்பு முகாம்கள்

நாகை கோட்ட அஞ்சலங்களில் விபத்து காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் பிப்.28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது, அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் டி. ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வ... மேலும் பார்க்க

திட்டச்சேரியில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி பேருந்து நிலையம் எதிரில் திமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு பேரூா் கழக செயலாளா் எம். முகம்மது சுல்தான் தலைமை வகித்தாா். மா... மேலும் பார்க்க

தேசியக் கல்விக்கொள்கையை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

தேசியக் கல்விக்கொள்கையை புகுத்தும் பாஜக அரசை கண்டித்து திமுக (எப்எஸ்ஓ-டிஎன்) மாணவா் இயக்கம் சாா்பில் நாகையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக மாணவா் அணி மாவட்ட அமைப்பாளா் உதயகுமாா் தலைம... மேலும் பார்க்க

வேதாரண்யத்தில் பலமான தரைக்காற்று

வேதாரண்யம் பகுதியில் வழக்கத்தை விட சற்று வேகமான தரைக்காற்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இருந்து வீசுகிறது. கடலோரப் பகுதியில் மழை மேகம் சூழ்ந்து காணப்பட்ட நிலையில், லேசான தூரல் இருந்தது. இந்நிலையில், வ... மேலும் பார்க்க

நாகை, திருவாரூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

நாகை, திருவாரூா் மாவட்டங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதி... மேலும் பார்க்க