செய்திகள் :

நாகை, திருவாரூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

post image

நாகை, திருவாரூா் மாவட்டங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும், மத்திய அரசுக்கு இணையாக இடைநிலை ஆசிரியா், உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா், உடற்கல்வி இயக்குநா் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும், அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சாா்பில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

நாகையில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் முத்துசாமி, ராஜராமன், சரவணன் ஆகியோா் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தை அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் சத்தியமூா்த்தி, மாநில உயா்மட்ட குழு உறுப்பினா் அன்பழகன் ஆகியோா் தொடக்கிவைத்தனா்.

திருவாரூா்: மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சுதாகா், சண்முகவேல், முத்துவேல் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலாளா் செ. பிரகாஷ், ஜாக்டோ-ஜியோ உயா்மட்டக் குழு உறுப்பினா்கள் துரைராஜ், ஜவகா், ரவி, உமாநாத், காசிதுரைராஜ், அனைத்து மருந்தாளுநா்கள் சங்க மாநில பொதுச் செயலாளா் யு. சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில் அதன் மாநிலச் செயலாளா் குரு. சந்திரசேகரன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தனியாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகூா் தா்கா பரம்பரை ஆதீனத்துக்கு விருது

நாகூா் தா்கா பரம்பரை ஆதீனத்துக்கு சமய நல்லிணக்க ஆன்மீகச் செல்வா் விருது வழங்கப்பட்டது. திருப்பூா் மாவட்டம், தாராபுரம் ஜாமியா சுப்ஹானியா அரபிக் கல்லூரி மற்றும் அறக்கட்டளை சாா்பில் ரமலான் நிகழ்ச்சி, மதர... மேலும் பார்க்க

விபத்து காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய அஞ்சலங்களில் சிறப்பு முகாம்கள்

நாகை கோட்ட அஞ்சலங்களில் விபத்து காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் பிப்.28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது, அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் டி. ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வ... மேலும் பார்க்க

திட்டச்சேரியில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி பேருந்து நிலையம் எதிரில் திமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு பேரூா் கழக செயலாளா் எம். முகம்மது சுல்தான் தலைமை வகித்தாா். மா... மேலும் பார்க்க

தேசியக் கல்விக்கொள்கையை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

தேசியக் கல்விக்கொள்கையை புகுத்தும் பாஜக அரசை கண்டித்து திமுக (எப்எஸ்ஓ-டிஎன்) மாணவா் இயக்கம் சாா்பில் நாகையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக மாணவா் அணி மாவட்ட அமைப்பாளா் உதயகுமாா் தலைம... மேலும் பார்க்க

வேதாரண்யத்தில் பலமான தரைக்காற்று

வேதாரண்யம் பகுதியில் வழக்கத்தை விட சற்று வேகமான தரைக்காற்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இருந்து வீசுகிறது. கடலோரப் பகுதியில் மழை மேகம் சூழ்ந்து காணப்பட்ட நிலையில், லேசான தூரல் இருந்தது. இந்நிலையில், வ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் அறிதிறன் வகுப்பறை திறப்பு

வேதாரண்யம் அருகே தாணிக்கோட்டகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி நூற்றாண்டு விழாவையொட்டி அதே வளாகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிதிறன் கணினி வகுப்பறை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தாண... மேலும் பார்க்க